முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புத்தாண்டே பூரிப்பாய் வாழ்த்திடு

     புத்தாண்டே பூரிப்பாய் வாழ்த்திடு      2 7 .12.2014                   வே.ம.அருச்சுணன்  பூத்துக்குலுங்கும் புத்தாண்டே வருகவே புதுமைகள் சூழந்தே புண்ணிய பூமியில் புனித வாழ்வைத் தருகவே........! 2014  ஆம் ஆண்டு மனங்கள் குலுக்கின கண்கள் குளமாகி இதயங்கள் சிதறின அந்தக் கணங்கள் மறக்க முடியுமா ? மாயமாகிப்போன விமானம் பீரங்கித் தாக்குதல் வானில் சிதறிய செல்வங்கள் மீண்டும் வருவார்களா நம்மோடு மகிழ்வோடு உறவாடுவார்களா ? அந்த மரணத்துளிகள்  கனவிலும் வேண்டாம் ஆத்மாக்கள் அமைதி பெறட்டும்.........! நம்பிக்கை ஒளிதரும் 2015 ஆம் ஆண்டே நலம் சேர்க்க வாரீர் நாடும் மக்களும் வளம் பெற மலர் தூவி வாழ்த்துக........! தமிழர்கள் இங்கே ஒற்றுமையில் தலைதூக்கி சோதனைகளைப் பொடியாக்கி தன்மானச் சிங்கங்களாய் வீர்கொண்டு தமிழ் காக்கும் மொழியினராய் சமயம் வாழ்விக்கும் நல்லோராய் பொருளியலில் காலூண்றி வாழ்தல் வேண்டும்..........! நாட்டுச் சுதந்திரத்தில் தமிழர் பங்கு பெரிதென்போம் நாட்டு வளர்ச்சியில் முதுகெழும்பாய் பல்லாண்டு துடிப்பாய் இயங்கிவிட்டோம்