முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தாண்டே பூரிப்பாய் வாழ்த்திடு

    புத்தாண்டே பூரிப்பாய் வாழ்த்திடு     27.12.2014
                  வே.ம.அருச்சுணன் 

பூத்துக்குலுங்கும்
புத்தாண்டே வருகவே
புதுமைகள் சூழந்தே
புண்ணிய பூமியில்
புனித வாழ்வைத் தருகவே........!

2014  ஆம் ஆண்டு
மனங்கள் குலுக்கின
கண்கள் குளமாகி
இதயங்கள் சிதறின
அந்தக் கணங்கள்
மறக்க முடியுமா?

மாயமாகிப்போன விமானம்
பீரங்கித் தாக்குதல்
வானில் சிதறிய செல்வங்கள்
மீண்டும் வருவார்களா நம்மோடு
மகிழ்வோடு உறவாடுவார்களா?
அந்த மரணத்துளிகள் 
கனவிலும் வேண்டாம்
ஆத்மாக்கள் அமைதி பெறட்டும்.........!

நம்பிக்கை ஒளிதரும்
2015 ஆம் ஆண்டே
நலம் சேர்க்க வாரீர்
நாடும் மக்களும் வளம் பெற
மலர் தூவி வாழ்த்துக........!

தமிழர்கள் இங்கே
ஒற்றுமையில் தலைதூக்கி
சோதனைகளைப் பொடியாக்கி
தன்மானச் சிங்கங்களாய் வீர்கொண்டு
தமிழ் காக்கும் மொழியினராய்
சமயம் வாழ்விக்கும் நல்லோராய்
பொருளியலில் காலூண்றி
வாழ்தல் வேண்டும்..........!

நாட்டுச் சுதந்திரத்தில்
தமிழர் பங்கு பெரிதென்போம்
நாட்டு வளர்ச்சியில் முதுகெழும்பாய்
பல்லாண்டு துடிப்பாய் இயங்கிவிட்டோம்
நாடு வளர்ந்துவிட்டது
ஏணியாய் இன்னும் நாம் யாசகம்
புரிதல் அநீதியன்றோ..........?

அரசியலில் சுழியம் என்போம்
நாளுக்கொன்றும் ஆளுக்கொன்றும்
பேசியே கொல்கின்றார்
நம்பியவர் நட்டாற்றில்
பத்துவிரல்கள் மூலதனம்
சுயமுன்னேற்றம் வேண்டி
உழைப்போம் உயர்வோம்..........!

மாற்றம் ஒன்றே மாறாதது
வாழ்வின் நீதியை ஏற்போம்
வாழ்வை மாற்றுவோம்
சந்ததி நிலைப்பதற்கு
சிந்தனை செய்வோம்
இலக்கு வகுத்தல் நீதியென்போம்
கூடிவாழ்தல் கோடி நன்மை என்போம்
சாதனைப் படைக்கப் புத்தாண்டில்
உறுதி கொள்வோம்..........!

புத்தாண்டே புனித வாழ்வைத் தந்திடு
இனம் காக்க பூரிப்பாய் வாழ்த்திடு.......!

 email: arunveloo03@gmail.com 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...