முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தாண்டே பூரிப்பாய் வாழ்த்திடு

    புத்தாண்டே பூரிப்பாய் வாழ்த்திடு     27.12.2014
                  வே.ம.அருச்சுணன் 

பூத்துக்குலுங்கும்
புத்தாண்டே வருகவே
புதுமைகள் சூழந்தே
புண்ணிய பூமியில்
புனித வாழ்வைத் தருகவே........!

2014  ஆம் ஆண்டு
மனங்கள் குலுக்கின
கண்கள் குளமாகி
இதயங்கள் சிதறின
அந்தக் கணங்கள்
மறக்க முடியுமா?

மாயமாகிப்போன விமானம்
பீரங்கித் தாக்குதல்
வானில் சிதறிய செல்வங்கள்
மீண்டும் வருவார்களா நம்மோடு
மகிழ்வோடு உறவாடுவார்களா?
அந்த மரணத்துளிகள் 
கனவிலும் வேண்டாம்
ஆத்மாக்கள் அமைதி பெறட்டும்.........!

நம்பிக்கை ஒளிதரும்
2015 ஆம் ஆண்டே
நலம் சேர்க்க வாரீர்
நாடும் மக்களும் வளம் பெற
மலர் தூவி வாழ்த்துக........!

தமிழர்கள் இங்கே
ஒற்றுமையில் தலைதூக்கி
சோதனைகளைப் பொடியாக்கி
தன்மானச் சிங்கங்களாய் வீர்கொண்டு
தமிழ் காக்கும் மொழியினராய்
சமயம் வாழ்விக்கும் நல்லோராய்
பொருளியலில் காலூண்றி
வாழ்தல் வேண்டும்..........!

நாட்டுச் சுதந்திரத்தில்
தமிழர் பங்கு பெரிதென்போம்
நாட்டு வளர்ச்சியில் முதுகெழும்பாய்
பல்லாண்டு துடிப்பாய் இயங்கிவிட்டோம்
நாடு வளர்ந்துவிட்டது
ஏணியாய் இன்னும் நாம் யாசகம்
புரிதல் அநீதியன்றோ..........?

அரசியலில் சுழியம் என்போம்
நாளுக்கொன்றும் ஆளுக்கொன்றும்
பேசியே கொல்கின்றார்
நம்பியவர் நட்டாற்றில்
பத்துவிரல்கள் மூலதனம்
சுயமுன்னேற்றம் வேண்டி
உழைப்போம் உயர்வோம்..........!

மாற்றம் ஒன்றே மாறாதது
வாழ்வின் நீதியை ஏற்போம்
வாழ்வை மாற்றுவோம்
சந்ததி நிலைப்பதற்கு
சிந்தனை செய்வோம்
இலக்கு வகுத்தல் நீதியென்போம்
கூடிவாழ்தல் கோடி நன்மை என்போம்
சாதனைப் படைக்கப் புத்தாண்டில்
உறுதி கொள்வோம்..........!

புத்தாண்டே புனித வாழ்வைத் தந்திடு
இனம் காக்க பூரிப்பாய் வாழ்த்திடு.......!

 email: arunveloo03@gmail.com 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை