முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தீப்பொறி கவிஞரே நீங்களுமா

கவிதை:     தீப்பொறி கவிஞரே நீங்களுமா                         வே.ம.அருச்சுணன்  நாளும் கவிமழை பொழிந்த தீப்பொறியே நீங்களுமா தீடீரென எங்களை விட்டு மறைந்து விட்டீர்.........! என்ன கொடுமை மண்ணின் மணம் பரப்பிய இலக்கிய ஜாம்பவான்களின் மரணித்தல் தொடர்கதை தானோ.........! சிறுகதை மன்னன் மு.அன்புச்செல்வன் நாவலாசிரியர் ப.சந்திரகாந்தம் தேன்சுவைக் கவிஞர் சீனி நைனா புதுமைக்கவிஞர் பொன்.நாவலன்  தீப்பொறியாரே மனம் வலிக்கிறது மறைவை ஏற்க மறுக்கிறது.....!   மரபுக்காகவே பிறப்பெடுத்து நற்கவி பல புனைந்தீர் மரபை மீறும் கவிஞரைச் சுட்டெரிக்கும் தீப்பொறியே மரபுக்கவிதை தள்ளாடும் வேளையிலே மண்ணை மறந்து விண்ணை நோக்கி நெடும் பயணம் சென்றதேனோ........! தீப்பொறியாய் சொற்கள் வெடித்தாளும் யாருக்கும் தீங்கிழைக்கா பிள்ளை மனம் உனக்கு மணிக்கவிஞர் படைதனை நாட்டில் திரட்டிவிட்டாய் உன் பணிதனைத் தொடர்வதற்கு அடித்தளம் அமைத்தீர் நிறைவான உந்தன் பணிக்கு வணங்கி நிற்போம்...........! கோம்பா ஆறு கவிதை உன் முகவரி கூறும் உந்தன் நெரிதனை உலகம் ஏற்கும் கவிதனில் மூழ