கவிதை : உயிர்க் கொல்லி கொரோனாவே வே.ம.அருச்சுணன் உயிர்க்கொல்லி கொரோனாவே ஏன்வந்தாய் ? ஊரையழிப் பதுனக்கு சுகம்தருமா மயிர்க்கூச் செரியும் சம்பவங்களால் மாண்டோர் எண்ணிக்கை அறிவாயோ ? பொறுப்பற்ற அற்பர்களின் செயல்தனிலே போர்தனில் வீழ்வதுபோல் அழிகின்றாரே மறுப்பேதும் கூறாமலே மாள்கின்றாரே மாமணியாய்ப் பிறந்ததன் பயன்யாது ? உன்பொல்லா குணத்தாலே உலகமினி உருப்படியாய் இருக்காதென மனிதகுலமும் நன்றேயினி வாழ்தலும் இயலாதென்றே நாதியற்றே மடிதல்தகுமா கொரோனாவே... ? உண்மையாய் உனைத்தீர்த்திட கூடுகின்றார் உறுதிபடவே கூறுகின்றார் நனிசிறந்த கண்ணான மருந்தாலே உனைவீழ்த்த ஊக்கமுடனே இளையோரே எழுகின்றார்....! E-mail: arunveloo03@gmail.com.
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்