ஆரணங்கே
ஆடல் காணிரோ
வே.ம.அருச்சுணன்
கல்யாண
விருந்தினில் களிப்புடனே
காளையர் கன்னியரைத் தேடினரே
நல்லதொரு துணையமைய
நலமுடனே
நாடினரே நற்குலத்தில் பெண்ணமைய
வல்லார்
வனிதயர் வரவேற்றும்
வாஞ்யுடன் வணங்கியும் அழகுமகள்
சொல்லம்பில்
கனியமுதம் சொல்லினும்
சோர்ந்திடாமல் சொர்கத்தைத்
தேடினரே...!
முகவடிவில் மயக்கிடவே முனைப்புடனே
மூக்குவிழியும் முன்னிறுத்தி காட்டுகின்றார்
அகம்காண
ஆண்மகனாய் அலைகிறார்
ஆள்பார்த்தே அழகுமயில் ஆடுகிறாள்
எகத்தாள நடையினிலே எழில்பயின்றே
ஏக்கத்தையே எளிதாகவே வீசுகிறாள்
சகதர்மினி அமையும் சமயந்தான்
சாதனையில் சமைந்தவர் நீயன்றோ....!
அழகினில் வார்த்திட்ட ஆரணங்கே
ஆளுமையில் அணையா தெய்வமே
பழமையைப் போற்றிடும் பசும்பொன்னே
பாங்குடனே பதிவழியை ஏற்பாயே
குழலோசை இனிமையில் குலமுயர்த்த
கூனிடாமல் குடும்பநலன் கொள்வதிலே
சுழன்றுவரும் வாழ்வினிலே சுகம்காணும்
சூட்சுமத்தைச் சுளையாய் சுவைத்திடு...!
கருத்துகள்
கருத்துரையிடுக