சிறுகதை : இலக்கு வே.ம.அருச்சுணன் - மலேசியா சங்ககால இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட டத்தோ இனியனுக்கு , குறுஞ்சி நிலத்தின் கூறுகளாகக் காணப்படும் மலையும் மலையைச் சார்ந்த இடமும் மிகவும் பிடிக்கும். மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழை ஒரு பாடமாக எடுத்து தமிழ் இலக்கியங்களை ஆழமாகப் பயின்று தமிழின் இனிமையைக் கண்டவர்.அதன் எதிரொலியாக அவரது வாழ்க்கையும் இயற்கையோடு இரண்டரக் கலந்தவொன்றாகிவிட்டது. மலைச்சரிவில் அமைந்துள்ள தனது இரட்டை மாடி வீட்டின் ‘ பல்கனி ’ யில் நின்றவாறு இளஞ்சிவப்பில் காணப்படும் காலைச் சூரியனின் உதயத்தைப் பார்த்து இரசிக்கிறார். வெள்ளாடைப் போர்த்தி நிமிர்ந்து நிற்கும் மலைகளின் எழிலான தோற்றம் கண்களுக்கு நல்ல விருந்தாக அமைகிறது. பச்சைச்செடிகளும் , கொடிகளும் , பூத்துக்குலுங்கும் அழகிய வண்ண மலர்களும் , பறவைகளின் ஒலிகளும் , பறந்து செல்லும் வண்ணத்துப் பூச்சிகளின் அழகும் , பறவைகளின் ஒலியும் , பூச்சிகளின் ரீங்காரமும் காலைப் பொழுதும் அவருக்கு உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கின்றன! பள்ளிப்பருவ
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்