புதுக்கவிதை: வாழ்ந்துகாட்டுங்கள் 14.11.2012
வே.ம.அருச்சுணன் - மலேசியா
பாட்டன் வாழ்ந்த காலம்
சோற்றுக்காகக்
காகங்களாய்ப் பறந்த காலம்
சோறு கண்ட இடம் சொர்கம் என்றே
வெந்ததைத் தின்று மாண்டாரர்
வாழ்வே மாயம் என்றார்
சோறு போட்டவரே தெய்வம் என்றார்.......!
படிப்பென்றால்
அது என்னவென்றே
படுகுஷியாய்க் கேள்விக் கேட்டாராம்
உண்மை அறிந்தபின்
அதுவெல்லாம் நமக்கில்லை என்றே
வெகு தமாஷாகக் கெக்கலித்தாராம்
சோற்றுக்கே வழியைக் காணோமாம்
கெட்டக் கேட்டுக்குப்
படிப்பு ஒன்னுதான் குறைச்சல் என்றாராம்.....!
ஹ...ஹ....ஹா...!
என்னே அட்டகாசமான வெடிச்சிரிப்பு
கூடிக்கூடிக் கதை அளந்தார்
வெட்டிப்பேச்சில் நிலை மறந்தார்
அடுத்தவன் கதையைக் கூடாரம் போட்டுப்
கதகதப்பாய்ப் பேசுவதில்
பட்டிமன்றம் வைத்தே
அற்பச் சுகத்தில்
நிலவைத் தொட்டார்.....!
போதுமடா சாமி......
நம்ம பாட்டன் பூட்டன் கதையெல்லாம்
கேட்டது போதும்
ஏமாளிகளும் கோமாளிகளும்
வாழ்ந்து மண்ணாய்ப் போனதை
நினைவில் நிறுத்தி
வல்லான் வகுத்ததே வழி
என்பதைச் சிந்தையில் புகுத்தி
புதுமையாய்ப் பிழைத்திடுவீர் இளையோரே.......!
நாளைப் பொழுதை
வளமுடன் அமைக்க
திரட்டுகச் செயல் வீரர்களை ஒன்றாய்ப்
புத்தாக்கத்தை உயிரில் நனைத்து
அடுத்தத் தலைமுறை
வாழ வடிவமைப்பீரே.....!
உன்னை நம்பி இருக்குது உலகம்
நன்மை செய்திட இன்றே
முந்திடல் சாலவும் நன்றே.......!
கருத்துகள்
கருத்துரையிடுக