முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்ந்துகாட்டுங்கள்


புதுக்கவிதை:                வாழ்ந்துகாட்டுங்கள்          14.11.2012
                     வே.ம.அருச்சுணன் - மலேசியா    
பாட்டன் வாழ்ந்த காலம்
சோற்றுக்காகக்
காகங்களாய்ப் பறந்த காலம்
சோறு கண்ட இடம் சொர்கம் என்றே
வெந்ததைத் தின்று மாண்டாரர்
வாழ்வே மாயம் என்றார்
சோறு போட்டவரே தெய்வம் என்றார்.......!

படிப்பென்றால்
அது என்னவென்றே
படுகுஷியாய்க் கேள்விக் கேட்டாராம்
உண்மை அறிந்தபின்
அதுவெல்லாம் நமக்கில்லை என்றே
வெகு தமாஷாகக் கெக்கலித்தாராம்
சோற்றுக்கே வழியைக் காணோமாம்
கெட்டக் கேட்டுக்குப்
படிப்பு ஒன்னுதான் குறைச்சல் என்றாராம்.....!

 ஹ...ஹ....ஹா...!
என்னே அட்டகாசமான வெடிச்சிரிப்பு
கூடிக்கூடிக் கதை அளந்தார்
வெட்டிப்பேச்சில் நிலை மறந்தார்
அடுத்தவன் கதையைக் கூடாரம் போட்டுப்
 கதகதப்பாய்ப் பேசுவதில்
பட்டிமன்றம் வைத்தே
அற்பச் சுகத்தில்
நிலவைத் தொட்டார்.....!

போதுமடா சாமி......
நம்ம  பாட்டன் பூட்டன் கதையெல்லாம்
கேட்டது போதும்
ஏமாளிகளும் கோமாளிகளும்
வாழ்ந்து மண்ணாய்ப் போனதை
நினைவில் நிறுத்தி
வல்லான் வகுத்ததே வழி
என்பதைச் சிந்தையில் புகுத்தி
புதுமையாய்ப் பிழைத்திடுவீர் இளையோரே.......!

நாளைப் பொழுதை
வளமுடன் அமைக்க
திரட்டுகச் செயல் வீரர்களை ஒன்றாய்ப்
புத்தாக்கத்தை உயிரில் நனைத்து
அடுத்தத் தலைமுறை
வாழ வடிவமைப்பீரே.....!

உன்னை நம்பி இருக்குது உலகம்
நன்மை செய்திட இன்றே
முந்திடல் சாலவும் நன்றே.......!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை