முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்ப்போராளிகள்


புதுக்கவிதை:             தமிழ்ப்போராளிகள்                    
         வே.ம.அருச்சுணன் – மலேசியா
பன்னிரண்டு  வயதினிலே
கடின  உழைப்பாலே
யூ.பி.எஸ்.ஆர்  தேர்வில்  ஏழு  ஏக்கள்  பெற்று
அரிய  சாதனைப்  படைத்தாய்
தமிழ்  அன்னை  உன்னை
மனம்  நிறைவுடன்  வாழ்த்தும்.....!

தாய்மொழியைக்  காக்க  வந்த
இளம்  தமிழ்ப்போராளியே
நீ  எதிர்கொண்ட  முதல்  சோதனையிலேயே
வெற்றித் திலகத்தைச்  சூட்டிக் கொண்டாய்
இனி  வெற்றிகள்   உன்னைத்  தழுவட்டும்
தடையின்றி  சாதனைகள்  தொடரட்டும்......!

உன்  வெற்றியால்
தமிழ்மொழி    ஆலமரமாய்
இந்நாட்டில்   செழித்து  வளரும்
தமிழர்  உள்ளங்களில்   செம்மொழியாய்  
அரியணையில்  அமரும்
ஓங்கி  நிற்கும்  தமிழ்ப் பள்ளிகள்
அடுத்த  தலைமுறைக்கும்
தமிழனின் புகழுரைக்கும்......!

தமிழ்  சோறு  போடுமா......?
என்போருக்கு  தமிழ்  எப்போதுமே
உயிர்  கொடுக்கும்
தமிழனின்  அடையாளத்தை  உலகுக்கு
உரக்கக்  கூறும்.......!

தமிழை  மறந்தோன்
தாயை   மறந்தவனாவான்
தமிழை   இகழ்ந்தவன்  
தாயை    இகழ்ந்தவனாவான்
தமிழ்ப்போராளியே
இனி  உன்னால்  மட்டுமே   தமிழ்  வாழும்.....!

நெஞ்சை  உயர்த்திக்காட்டு
தமிழ்ப்பால்   உண்டோன்
உலகை   ஆளப்பிறந்தவன்   என்பதை
ஞானத்தால்  உணர்த்திடு.....!

உன்  வெற்றிக்கு  வித்திட்ட
மாதா,பிதா,குரு,தெய்வம்
ஆகிய  நால்வரை  மறவாமல்  வணங்கிடு
அகிலம்  உன்னை   வாழ்த்திடும்.........!

                                       *******************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாமன் மச்சான் விளையாட்டு

            மாமன் மச்சான் விளையாட்டு                                       வே.ம.அருச்சுணன்  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘ சிவாஜி போஸ் ’    இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல் , வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான் இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த் தமிழன் முதுகில்   பவனிவரலாம் அல்லவா ? தேர்தல் கொள்ளையுரையைப் பவிசுடன் அறிவிக்கிறார் ...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:             பணமூட்டை புகை மூட்டமானது                                  வே.ம.அருச்சுணன் – மலேசியா   சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா ? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா ? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா ? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா ? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா ?   உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு!   ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!   மக்கள்  அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் ...