முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்ப்போராளிகள்


புதுக்கவிதை:             தமிழ்ப்போராளிகள்                    
         வே.ம.அருச்சுணன் – மலேசியா
பன்னிரண்டு  வயதினிலே
கடின  உழைப்பாலே
யூ.பி.எஸ்.ஆர்  தேர்வில்  ஏழு  ஏக்கள்  பெற்று
அரிய  சாதனைப்  படைத்தாய்
தமிழ்  அன்னை  உன்னை
மனம்  நிறைவுடன்  வாழ்த்தும்.....!

தாய்மொழியைக்  காக்க  வந்த
இளம்  தமிழ்ப்போராளியே
நீ  எதிர்கொண்ட  முதல்  சோதனையிலேயே
வெற்றித் திலகத்தைச்  சூட்டிக் கொண்டாய்
இனி  வெற்றிகள்   உன்னைத்  தழுவட்டும்
தடையின்றி  சாதனைகள்  தொடரட்டும்......!

உன்  வெற்றியால்
தமிழ்மொழி    ஆலமரமாய்
இந்நாட்டில்   செழித்து  வளரும்
தமிழர்  உள்ளங்களில்   செம்மொழியாய்  
அரியணையில்  அமரும்
ஓங்கி  நிற்கும்  தமிழ்ப் பள்ளிகள்
அடுத்த  தலைமுறைக்கும்
தமிழனின் புகழுரைக்கும்......!

தமிழ்  சோறு  போடுமா......?
என்போருக்கு  தமிழ்  எப்போதுமே
உயிர்  கொடுக்கும்
தமிழனின்  அடையாளத்தை  உலகுக்கு
உரக்கக்  கூறும்.......!

தமிழை  மறந்தோன்
தாயை   மறந்தவனாவான்
தமிழை   இகழ்ந்தவன்  
தாயை    இகழ்ந்தவனாவான்
தமிழ்ப்போராளியே
இனி  உன்னால்  மட்டுமே   தமிழ்  வாழும்.....!

நெஞ்சை  உயர்த்திக்காட்டு
தமிழ்ப்பால்   உண்டோன்
உலகை   ஆளப்பிறந்தவன்   என்பதை
ஞானத்தால்  உணர்த்திடு.....!

உன்  வெற்றிக்கு  வித்திட்ட
மாதா,பிதா,குரு,தெய்வம்
ஆகிய  நால்வரை  மறவாமல்  வணங்கிடு
அகிலம்  உன்னை   வாழ்த்திடும்.........!

                                       *******************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை