ஊடக வன்முறை மலேசியத் தமிழ் ஊடகங்களின் மக்கள் விரோதப் போக்கு நூலாசிரியர்: இந்நாட்டு ஒட்டு மொத்த தமிழர்களின் அடையாளச் சின்னமாக விளங்கும் தோட்டப்புறம் , அங்கு வாழ்ந்து மடிந்த நமது முன்னோர்கள் , இன்றும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் நமது உடன் பிறப்புகளைப் பற்றிய சோக வரலாற்றை எண்ணிப்பார்க்கும் போதெல்லாம் நூலாசிரியர் சகோதரர் மு.வரதராசு அவர்கள் எழுதிய நூல்கள் நமக்கு நினைவுக்கு வரும். தோட்டப்பாட்டாளிகள் எதிர் கொண்ட பல்வேறு பிரச்னைகளைக் கள ஆய்வு செய்து வெளியிட்ட அவரது நூல்கள் இந்நாட்டு இந்தியர்கள் , குறிப்பாக தமிழர்களின் இக்கட்டானச் சூழல்களை நமக்குப் படம் போட்டுக் காட்டியுள்ளன. தோட்டத்தில் பிறந்து வளர்ந்து நூலாசிரியர் , குடும்பச் சூழலால் இளம்வயதிலேயே தோட்டத்தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி பல்வேறு துக்கங்களையும் துயரங்களையும் அனுபவித்த நூலாசிரியர் தன்பட்டறிவை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் வகையில் , மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் கல்வி , சமூகப் பொருளாதார நிலைகள் குறித்து இதுவரையில் விரிவான ஐந்து நூல்கள் எழ
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்