முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாமன் மச்சான் விளையாட்டு


            மாமன் மச்சான் விளையாட்டு             
                         வே.ம.அருச்சுணன் 

மாமன் மச்சான் விளையாட்டை
மிகவும் பக்குவமாகப்
பன்னிரண்டு முறை விளையாடியது
போதாதென்று விளையாட்டுக்காட்ட
பதின்மூன்றாவது முறையும் படையுடன்
புறப்பட்டுவிட்டார் இதோ சிவாஜி போஸ்  
இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை
மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....!

தமிழனைக் குழியில் தள்ள
பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே
முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான்
வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான்
நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால்
நாளுங் கெட்டத் வீரத்தமிழன்
வெற்றிவேல்,வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான்
இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த்
தமிழன் முதுகில்  பவனிவரலாம் அல்லவா?

தேர்தல் கொள்ளையுரையைப்
பவிசுடன் அறிவிக்கிறார்
பக்கத்தான் மச்சான்
புத்திராஜெயாவே குறியாய் எண்ணி
அல்லும் பகலும் பாடாய்ப் படுகிறார்
புதுவாழ்வு பொத்துக் கொண்டு வரப்போகுது என்றே
மச்சான் பின்னால் சென்று
ஆள்சேர்த்தத் தமிழனுக்கு மீண்டுமொரு
செவினி அறை.....!

உலகில் தமிழனை வாழவிட்டது யார்?
பர்மா தமிழர்கள் கட்டியத் துணியோடு
நாட்டைவிட்டு விரட்டப்படவில்லையா?
இலங்கை அரசு ஈழத்தமிழர்களை
ஒரே நாளில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள்
நம் கண்ணெதிரே கொன்று தீர்க்கவில்லையா?

இங்குள்ளத் தமிழன் என்பவன்
கைகட்டி, வாய்ப்பொத்தி, கக்கத்தில் துண்டை
அடைப்பவன் மட்டும் தானா?
மானம்,ரோசம் இல்லாதவனா?
அறிவற்றப் பிண்டமா?
ஓட்டுரிமை அற்றவனா?
நாட்டு வளர்சிக்கு ஒன்றுமே செய்யாதவனா?
சபா,சரவாக் மக்களுக்கு வளர்ச்சியுண்டு
பூர்வீக மக்களுக்கு நிலமுண்டு,உயர்வான கல்வியுண்டு
நிம்மதியான வாழ்வுக்கும் உத்திரவாதமுண்டு
ஆனால்,
இருநூறு ஆண்டுகள் முன்நாட்டை வளமாக்கிய
தமிழனுக்கு தேர்தல் வாக்குறுதித் தருவதில்
பே...பே....வா?

கண்கட்டி வித்தையெல்லாம் போதும் மச்சான்
புதுசா நீவேற நெய்பந்தம் உயர்த்திப் பிடிக்கவேண்டாம்
மாமன் மச்சான் விளையாட்டெல்லாம்
காட்டினது  போதும் மச்சான்
இனி நம் வாழ்வில் ஏமாற்றம் வேண்டாம்
நம்வாழ்வில் மாற்றம் காண
நமது உரிமையைக் காத்திடுவோம்
அணி திரண்டிடுவோம்....!

சுயநலப் பேர்வழிகள்
நம்மைத் துருப்புச் சீட்டாகப் பயன் படுத்துவதை
தடுத்திடுவோம்,விழித்திடுவோம்
நமது சந்ததி வளமுடன் வாழ்வதற்கு
உரிமையை எவ்வளவு விலை கொடுத்தும்
மீட்டெடுப்போம்
வாக்கை சரியாகப் பயன்படுத்துவோம்
இந்த வாய்ப்பை நழுவவிடோம்
நம்மைக் கருவறுத்தக் கொடியோர்களை
வேரறுக்கக் கைகொடுப்பீர்
வேற்றுமையில் ஒற்றுமைக் காண்பீர்
மானம் காக்க விரைந்து வாரீர்
இது நமது இறுதிப்போர       
உயிருள்ளவரைப் போராடவேண்டும்
ஓட்டுரிமை என்ன வென்று காட்டிடுவோம்......!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...