முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செம்மொழியும் சேமமும்

கவிதை:      செம்மொழியும்   சேமமும்                21.1.2020                வே.ம.அருச்சுணன்  செம்மொழிப்பாடல்   பாடுவதால்   சேமமாகுமே– இங்கே        சேதாரமின்றி   வாழ்ந்திடலும்   உண்மையாகுமே...!         வம்பிலாவாழ்   வுதனையேற்றலில்     உன்னதமாகுமே– இங்கே         வான்முட்டும்    சீரியவாழ்வும்   நிலையாகுமே....! தும்பியல்வாழ்     விங்கேநீக்கின்      செழுமையாகுமே- இங்கே         தூற்றலில்லா    ஒருமைவாழ்வும்   உறுதியாகுமே....! எம்மொழியாலே     ஒளியேற்றிநல்    வாழ்வும்வந்திடுமே- இங்கே          ஏளப்பேச்சினைத்    துறப்பின்வாழ்வு     பொன்னாகுமே....! மொழியாலே    ஒன்றாதல்நற்     பேரென்போமே- இங்கே          மோதலில்லா வாழ்வேற்று   மகிழ்ச்சி கொள்வோமே....! வழிபலவுளவே   இனிதேமொழி   நலம்வகுப்போமே-இங்கே          வாடியபயிருக்குத்   தினமும்நீரூட்டி    வளர்ப்போமே....! தொழிலுறவாலே   உரிமைவளர்ந்திட   நேசம்விதைப்போமே – இங்கே          தோழமைக்குத் அன்னைமொழி   எந்நாளும்காப்போமே....! வழியவரும்தேவி    சிரம்தாழ்த்தி   மகிழ்போமே- இங்கே          வாழ்விழந்தோர்   செந்தமிழால் சீராவோம

நிழல் நிஜெமாகட்டும்

                   நிழல் நிஜெமாகட்டும்                                வே.ம.அருச்சுணன்  நிழலில்   வாழ்ந்தது   போதும் – இனி     நோகாமல்   உண்டாலே பேதம் விழலுக்கிறைத்த நீரானது   சேதம்- இனி       வேண்டுமளவு   பாடுவெற்றி   கீதம்...! மனிதனாய்   நலந்தனை   வேண்டுக –இனி        முன்னேறும்   தடத்திலே சென்றிடுக தனியனாய்   முயற்சிகள்   செய்திடுக – இனி        தானமும்   தர்மமும் தந்திடுக...! இனமானம் மறவாமல் உழைத்திடு- இனி        ஈடில்லா வாழ்வுதனை அடைந்திடு மனமெல்லாம் உயர்தனிலே   செலுத்திடு – இனி       மானமுள   இன்மென்றே   உரைத்திடு....! நமைத்தூற்றும் மூடர்களையே   வென்றிடுக –இனி        நாட்டுடனே   விவேகமுடனே   நேசித்திடுக இழையோடும் துணிவாலே   நிமிர்ந்திடுக –இனி       ஈடற்றபுகழும் வாய்த்தேநீ   எழுந்திடு...! இழிச்சவன்   நீயல்லயென   முழங்கிடுக –இனி        ஈசனருள் உனக்கென்றே சொல்லிடுக எழிச்சியொன்றே   நீடித்தவாழ்வே   உணர்ந்திடுக-இனி        எவர்தடுப்பினும்   வெற்றிவருமே மகிழ்ந்திடுக....!                                 

உலகையாளும் பொங்கலே வாழியவே...!

உலகையாளும் பொங்கலே வாழியவே                            வே.ம.அருச்சுணன் இனிதாய்  வந்திடும் பொங்கலே       உள்ளங்கள்  மகிழ்ந்திடும்  பொங்கலே     உலகமே   கொண்டாடும்  பொங்கலே       உழைப்பை  நினைவூட்டும்  பொங்கலே! தமிழர்கள்   ஒன்றாகும்    பொங்கலே     தன்மானம்  வளர்த்திடும்  பொங்கலே பொங்கும்   தமிழரின்    பொங்கலே       போற்றும்   ஒற்றுமைப்   பொங்கலே! மலையகம்  கண்டநற்   பொங்கலே        மாண்பையும்  உயர்த்திடும்  பொங்கலே மனமிறங்கி    மகிழ்ந்திடும்   பொங்கலே        மாசுகொண்ட  சாதியழிக்கும்  பொங்கலே! சத்தியமாய்   நலம்பயக்கும்   பொங்கலே        சாதகமாய்  வாழ்த்தவரும்  பொங்கலே தெம்புடனே  தீமையழி   பொங்கலே          தமிழரிங்கே  செழிக்கனுமே  பொங்கலே! பொங்கியெழு  வீரமுடனே  பொங்கலே      போர்குணம் கொண்டெழு  பொங்கலே தமிழரினம்  கூடிபொங்கும்  பொங்கலே       தரமுயரவே  பொங்கிடுவாய்ப்  பொங்கலே! பல்லினம்  மெச்சிடுமே   பொங்கலே         பாசத்தினை  வளர்க்கனுமே  பொங்கலே எந்நாளும்    இணைவோம்   பொங்கலே          ஏற்றமேயினி  வந்திடுமே பொங்கலே!

செல்லப்பிள்ளை

சிறுகதை :                  செல்லப்பிள்ளை                               12 .1. 2020                                                 வே.ம.அருச்சுணன்                “ அம்மா...பை...! பை....!” “கவனம்....கவனம்..... கோதை” “சரிம்மா...!” “படிப்பு முடிஞ்ச கையோட … .. மக   வேலைக்குக்   கிளம்பிட்டாளே !”    “குடும்ப கஸ்டம் தெரிஞ்சவ...அரசி!” வீட்டுக்கு அவள் ஒரே பெண் குழந்தையானாலும் , ஆண் குழந்தையைப் போல தைரியமா வளர்க்கின்றனர் பெற்றோர். தற்காப்புக் கலைகளிலும் அவள் தேறியிருந்தாள்! வயதான பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும்!வாழ்க்கையில் அவள் இதுவரையில் பெரிய கனவுகள் எதனையும் பதியம் போடவில்லை என்றாலும் மனதின் உள்ளீடாக எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஆசாபாசங்களும் இல்லாமலிருக்குமா என்ன ? பெற்றோருடன் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பது அவளது முதன்மை எண்ணம்!   காலம் வேகமாக ஓடுகிறது!   ஐந்தாண்டுகளாக வேலை செய்யும் கோதையின் திறனைப் பார்த்து ‘ சுப்பவைசர் ’ நிலைக்கு உயர்த்துகின்றது நிர்வாகம்.பதவி உயர்வு , கூடிய சம்பளம் கோதையின் வாழ்க்கை பூங்குன்றாய் மிளிர்கிறது! “பத்து வருசமா கம்பேனிக்கு மாடாய் உழ