நிழல்
நிஜெமாகட்டும்
வே.ம.அருச்சுணன்
நிழலில்
வாழ்ந்தது போதும் – இனி
நோகாமல் உண்டாலே பேதம்
விழலுக்கிறைத்த நீரானது சேதம்- இனி
வேண்டுமளவு பாடுவெற்றி கீதம்...!
மனிதனாய் நலந்தனை
வேண்டுக –இனி
முன்னேறும் தடத்திலே சென்றிடுக
தனியனாய் முயற்சிகள்
செய்திடுக – இனி
தானமும் தர்மமும் தந்திடுக...!
இனமானம் மறவாமல் உழைத்திடு- இனி
ஈடில்லா வாழ்வுதனை அடைந்திடு
மனமெல்லாம் உயர்தனிலே செலுத்திடு – இனி
மானமுள இன்மென்றே உரைத்திடு....!
நமைத்தூற்றும் மூடர்களையே வென்றிடுக –இனி
நாட்டுடனே விவேகமுடனே நேசித்திடுக
இழையோடும் துணிவாலே நிமிர்ந்திடுக –இனி
ஈடற்றபுகழும் வாய்த்தேநீ
எழுந்திடு...!
இழிச்சவன் நீயல்லயென
முழங்கிடுக –இனி
ஈசனருள் உனக்கென்றே சொல்லிடுக
எழிச்சியொன்றே நீடித்தவாழ்வே
உணர்ந்திடுக-இனி
எவர்தடுப்பினும் வெற்றிவருமே
மகிழ்ந்திடுக....!
கருத்துகள்
கருத்துரையிடுக