முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செம்மொழியும் சேமமும்



கவிதை:     செம்மொழியும்  சேமமும்               21.1.2020
              வே.ம.அருச்சுணன் 

செம்மொழிப்பாடல்  பாடுவதால்  சேமமாகுமே– இங்கே
       சேதாரமின்றி  வாழ்ந்திடலும்  உண்மையாகுமே...!     
வம்பிலாவாழ்  வுதனையேற்றலில்   உன்னதமாகுமே– இங்கே
        வான்முட்டும்   சீரியவாழ்வும்  நிலையாகுமே....!
தும்பியல்வாழ்    விங்கேநீக்கின்    செழுமையாகுமே- இங்கே
        தூற்றலில்லா   ஒருமைவாழ்வும்  உறுதியாகுமே....!
எம்மொழியாலே    ஒளியேற்றிநல்   வாழ்வும்வந்திடுமே- இங்கே
         ஏளப்பேச்சினைத்   துறப்பின்வாழ்வு   பொன்னாகுமே....!

மொழியாலே   ஒன்றாதல்நற்    பேரென்போமே- இங்கே
         மோதலில்லா வாழ்வேற்று  மகிழ்ச்சி கொள்வோமே....!
வழிபலவுளவே  இனிதேமொழி  நலம்வகுப்போமே-இங்கே
         வாடியபயிருக்குத்  தினமும்நீரூட்டி   வளர்ப்போமே....!
தொழிலுறவாலே  உரிமைவளர்ந்திட  நேசம்விதைப்போமே – இங்கே
         தோழமைக்குத் அன்னைமொழி  எந்நாளும்காப்போமே....!
வழியவரும்தேவி   சிரம்தாழ்த்தி  மகிழ்போமே- இங்கே
         வாழ்விழந்தோர்  செந்தமிழால் சீராவோமே....!

ஒற்றுமொழியாலே   இனயெழிச்சிதனை  ஏற்றுவோமே – இங்கே    
         ஓய்ந்திடாமலே  இனியமொழி  காத்திடுவோமே...!
வெற்றுமொழித்  தினிப்புகளை  மறுப்போமே - இங்கே
         வேற்றுமையில்  ஒற்றுமைகாணத்  துடித்திடுவோமே...!
பற்றுகள்பல  இருப்பினும் தாய்மொழியால் உயர்வோமே - இங்கே
        பாசத்தால் நேசத்தால் உடன்பிறப்புகள் வாழ்விப்போமே....!
முற்பகல் செய்யின் பிற்பகலில் மாற்றமே காணுவோமே- இங்கே
         மூத்தமொழியாலே உலகில்சிறந்தே நிலைப்போமே....!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை