கவிதை: செம்மொழியும் சேமமும் 21.1.2020
வே.ம.அருச்சுணன்
செம்மொழிப்பாடல் பாடுவதால்
சேமமாகுமே– இங்கே
சேதாரமின்றி வாழ்ந்திடலும்
உண்மையாகுமே...!
வம்பிலாவாழ் வுதனையேற்றலில் உன்னதமாகுமே–
இங்கே
வான்முட்டும் சீரியவாழ்வும் நிலையாகுமே....!
தும்பியல்வாழ் விங்கேநீக்கின் செழுமையாகுமே- இங்கே
தூற்றலில்லா ஒருமைவாழ்வும் உறுதியாகுமே....!
எம்மொழியாலே ஒளியேற்றிநல் வாழ்வும்வந்திடுமே- இங்கே
ஏளப்பேச்சினைத் துறப்பின்வாழ்வு பொன்னாகுமே....!
மொழியாலே ஒன்றாதல்நற் பேரென்போமே- இங்கே
மோதலில்லா வாழ்வேற்று மகிழ்ச்சி கொள்வோமே....!
வழிபலவுளவே இனிதேமொழி
நலம்வகுப்போமே-இங்கே
வாடியபயிருக்குத் தினமும்நீரூட்டி வளர்ப்போமே....!
தொழிலுறவாலே உரிமைவளர்ந்திட நேசம்விதைப்போமே – இங்கே
தோழமைக்குத் அன்னைமொழி எந்நாளும்காப்போமே....!
வழியவரும்தேவி சிரம்தாழ்த்தி மகிழ்போமே- இங்கே
வாழ்விழந்தோர் செந்தமிழால் சீராவோமே....!
ஒற்றுமொழியாலே இனயெழிச்சிதனை ஏற்றுவோமே – இங்கே
ஓய்ந்திடாமலே இனியமொழி
காத்திடுவோமே...!
வெற்றுமொழித் தினிப்புகளை
மறுப்போமே - இங்கே
வேற்றுமையில் ஒற்றுமைகாணத்
துடித்திடுவோமே...!
பற்றுகள்பல இருப்பினும் தாய்மொழியால் உயர்வோமே - இங்கே
பாசத்தால் நேசத்தால் உடன்பிறப்புகள்
வாழ்விப்போமே....!
முற்பகல்
செய்யின் பிற்பகலில் மாற்றமே காணுவோமே- இங்கே
மூத்தமொழியாலே உலகில்சிறந்தே நிலைப்போமே....!
கருத்துகள்
கருத்துரையிடுக