ஆசிரியர் தினச்சிறப்புக் கவிதை: பாதம் தொட்டு வணங்குவோம் வே.ம.அருச்சுணன் – மலேசியா வாழ்வு பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையாய் மணம் வீச வேண்டுமா ? பூரிப்புடன் வாழ்வில் நடை பயில வேண்டுமா ? அறிவு தந்து உலகை காட்டிய ஆத்மாவை அடி தொட்டு பாதம் வணங்குவோம் ஆசி பெற்று நிறையாய் வாழ்வோம். அறிவின் முதிர்ச்சிவே வாழ்வின் வளர்ச்சி ஆய்ந்தால் பெருவாழ்வு இவை அனைத்தும் தந்த ஆசான் வாழும் வரை வணங்கிடு மறந்தால் அடுத்தப் பிறவி பாவப் பிறவிதான் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை குருவின் சொல் அதற்கும் மேல குரு இறைவனின் அவதாரம் வேண்டுமளவு பெற்றுக் கொள் நன்றியுடன் குருவை வணங்குதல் எடுத்த பிறப்புக்குப் பொருண்டு. நானிலம் போற்றும் நல்லாசிரியர் நாட்டுக்குழைப்பவர் என்னாலும் நற்குடிகளைத் நாளும் தருபவர் மாதா , பிதா , குரு , தெய்வம் தவறாமல் வணங்குதல் நமது கடன்களென்போம் மறுத்தல் பாவத்தின் உச்சமென்றோ! புனிதமான ஆசிரியர் தினத்தில் கல்வி தந்த தெய்வங்களை நாட்டுக்கே தலையென்றாலும் மறுக்காமல்
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்