முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆசிரியர் தினச்சிறப்புக் கவிதை: பாதம் தொட்டு வணங்குவோம்


       ஆசிரியர் தினச்சிறப்புக் கவிதை:                              
           பாதம் தொட்டு வணங்குவோம்  
               வே.ம.அருச்சுணன் – மலேசியா 

வாழ்வு பூத்துக் குலுங்கும்
பூஞ்சோலையாய் மணம்
வீச வேண்டுமா?
பூரிப்புடன் வாழ்வில்
நடை பயில வேண்டுமா?

அறிவு தந்து
உலகை காட்டிய ஆத்மாவை
அடி தொட்டு பாதம் வணங்குவோம்
ஆசி பெற்று நிறையாய் வாழ்வோம்.

அறிவின் முதிர்ச்சிவே வாழ்வின் வளர்ச்சி
ஆய்ந்தால்  பெருவாழ்வு இவை
அனைத்தும் தந்த ஆசான்
வாழும் வரை வணங்கிடு மறந்தால்
அடுத்தப் பிறவி பாவப் பிறவிதான்
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
குருவின் சொல் அதற்கும் மேல
குரு இறைவனின் அவதாரம்
வேண்டுமளவு பெற்றுக் கொள்
நன்றியுடன் குருவை வணங்குதல்
எடுத்த பிறப்புக்குப் பொருண்டு.

நானிலம் போற்றும் நல்லாசிரியர்
நாட்டுக்குழைப்பவர் என்னாலும்
நற்குடிகளைத் நாளும் தருபவர்
மாதா,பிதா,குரு,தெய்வம்
தவறாமல் வணங்குதல்
நமது கடன்களென்போம்
மறுத்தல் பாவத்தின் உச்சமென்றோ!

புனிதமான ஆசிரியர் தினத்தில்
கல்வி தந்த தெய்வங்களை
நாட்டுக்கே தலையென்றாலும்
மறுக்காமல்
தலை வணங்கிப் பாதம் தொட்டு
நன்னாளில் வணங்குதலும்
வளமுடன் வாழ்தலும்
மனித நியதியன்றோ?

சான்றோரை மதித்தலும்
அவர் சொற்படி நடத்தலும்
அமைதி உலகில் பிறக்குமன்றோ
அறிவுக்கு தலை வணங்குவோம்
அறிஞர்களாய்ப் பிறப்பெடுப்போம்
ஆசியரின் பெயர் சிறக்க வைப்போம்.

அனைவருக்கும்
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

முற்றும்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...