முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆசிரியர் தினச்சிறப்புக் கவிதை: பாதம் தொட்டு வணங்குவோம்


       ஆசிரியர் தினச்சிறப்புக் கவிதை:                              
           பாதம் தொட்டு வணங்குவோம்  
               வே.ம.அருச்சுணன் – மலேசியா 

வாழ்வு பூத்துக் குலுங்கும்
பூஞ்சோலையாய் மணம்
வீச வேண்டுமா?
பூரிப்புடன் வாழ்வில்
நடை பயில வேண்டுமா?

அறிவு தந்து
உலகை காட்டிய ஆத்மாவை
அடி தொட்டு பாதம் வணங்குவோம்
ஆசி பெற்று நிறையாய் வாழ்வோம்.

அறிவின் முதிர்ச்சிவே வாழ்வின் வளர்ச்சி
ஆய்ந்தால்  பெருவாழ்வு இவை
அனைத்தும் தந்த ஆசான்
வாழும் வரை வணங்கிடு மறந்தால்
அடுத்தப் பிறவி பாவப் பிறவிதான்
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
குருவின் சொல் அதற்கும் மேல
குரு இறைவனின் அவதாரம்
வேண்டுமளவு பெற்றுக் கொள்
நன்றியுடன் குருவை வணங்குதல்
எடுத்த பிறப்புக்குப் பொருண்டு.

நானிலம் போற்றும் நல்லாசிரியர்
நாட்டுக்குழைப்பவர் என்னாலும்
நற்குடிகளைத் நாளும் தருபவர்
மாதா,பிதா,குரு,தெய்வம்
தவறாமல் வணங்குதல்
நமது கடன்களென்போம்
மறுத்தல் பாவத்தின் உச்சமென்றோ!

புனிதமான ஆசிரியர் தினத்தில்
கல்வி தந்த தெய்வங்களை
நாட்டுக்கே தலையென்றாலும்
மறுக்காமல்
தலை வணங்கிப் பாதம் தொட்டு
நன்னாளில் வணங்குதலும்
வளமுடன் வாழ்தலும்
மனித நியதியன்றோ?

சான்றோரை மதித்தலும்
அவர் சொற்படி நடத்தலும்
அமைதி உலகில் பிறக்குமன்றோ
அறிவுக்கு தலை வணங்குவோம்
அறிஞர்களாய்ப் பிறப்பெடுப்போம்
ஆசியரின் பெயர் சிறக்க வைப்போம்.

அனைவருக்கும்
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

முற்றும்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை