கவிதை: சிந்தையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் மா.இராமையா வே.ம.அருச்சுணன் சங்ககால இலக்கிய சாரளில் மனிதன் புத்தனானான் புடம் போட்ட தங்கமானான் கறையின்றி உயர்ந்து நின்றான்.............! சிலம்புக்கு உயிர் கொடுத்த இளங்கோ நீதியைப் புகட்டிச் சென்றார் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் மா.இராமையா தூணாய் நிலைத்து நின்றார்.......! எண்பத்தாறிலும் தடி ஊண்றா இளைஞராய் இலக்கியம் படைக்கிறார் தமிழன்னை மனம் குளிர நூல்கள் வெளியீடுகள் செய்கின்றார்........! தொய்வில்லா எழுத்தாலே தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரப்புகின்றார். மலேசியத் தமிழ் இலக்கியம் உயர்வை உலகத்தார் போற்றுகின்றார்...........! படைப்புகளை நூலாக்கும் முயற்சிதனை எழுத்தாளர் மரபாகக் கொள்ளுதல் வேண்டும் மணியான கருவூலங்கள் மண்ணில் தவழ வேண்டும் மறைந்தாலும் பெயர் சொல்ல நூல்கள் வேண்டும் வேள்வியை நயம்படச் செய்தவர் பெரியவர் மா.இராமையா..........! இலக்கிய
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்