கவிதை: சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்
இலக்கிய குரிசில்
மா.இராமையா
வே.ம.அருச்சுணன்
சங்ககால இலக்கிய
சாரளில்
மனிதன்
புத்தனானான்
புடம் போட்ட
தங்கமானான்
கறையின்றி உயர்ந்து
நின்றான்.............!
சிலம்புக்கு
உயிர் கொடுத்த
இளங்கோ
நீதியைப்
புகட்டிச் சென்றார்
மலேசியத்
தமிழ் இலக்கியத்தில்
மா.இராமையா
தூணாய்
நிலைத்து நின்றார்.......!
எண்பத்தாறிலும்
தடி ஊண்றா
இளைஞராய்
இலக்கியம்
படைக்கிறார்
தமிழன்னை மனம்
குளிர
நூல்கள் வெளியீடுகள் செய்கின்றார்........!
தொய்வில்லா எழுத்தாலே
தேமதுர தமிழோசை
உலகமெல்லாம் பரப்புகின்றார்.
மலேசியத் தமிழ் இலக்கியம்
உயர்வை உலகத்தார் போற்றுகின்றார்...........!
படைப்புகளை
நூலாக்கும்
முயற்சிதனை
எழுத்தாளர்
மரபாகக்
கொள்ளுதல் வேண்டும்
மணியான
கருவூலங்கள்
மண்ணில் தவழ
வேண்டும்
மறைந்தாலும்
பெயர் சொல்ல
நூல்கள்
வேண்டும் வேள்வியை
நயம்படச்
செய்தவர்
பெரியவர்
மா.இராமையா..........!
இலக்கிய
வானில்
சுதந்திரமாய்ச்
சிறகடித்துப் பறந்து
கதைகளையும்
காவியங்களையும்
விதைகளாய்
இம்மண்ணில் பதியமிட்ட
பாசத்துக்
குரிய மா.இராமையா
பாராட்டுக்குரியவர்................!
பல ஆண்டுகள்
நலமுடன் வாழ
வேண்டும்
தேன் சிந்தும்
படைப்புகள்
தமிழ்த்தாயின்
மனம்
பல்லாண்டுகள்
குளிர வேண்டும்...............!
வாழ்த்த
நமக்கு வயது
போதாது என்றாலும்
பெரிய மனசு
இருக்கிறது
அதுவும் கடல்
அளவு
மனதார
வாழ்த்துகின்றோம்
வாழ்வீர்
பல்லாண்டு......!
முற்றும்
கருத்துகள்
கருத்துரையிடுக