முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:        சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்     
            இலக்கிய குரிசில் மா.இராமையா
                         
                                     வே.ம.அருச்சுணன்                                       

சங்ககால இலக்கிய
சாரளில்
மனிதன் புத்தனானான்
புடம் போட்ட தங்கமானான் 
கறையின்றி உயர்ந்து நின்றான்.............!

சிலம்புக்கு உயிர் கொடுத்த
இளங்கோ
நீதியைப் புகட்டிச் சென்றார்
மலேசியத் தமிழ் இலக்கியத்தில்
மா.இராமையா
தூணாய் நிலைத்து நின்றார்.......!

எண்பத்தாறிலும்
தடி ஊண்றா இளைஞராய்
இலக்கியம் படைக்கிறார் 
தமிழன்னை மனம் குளிர
நூல்கள் வெளியீடுகள் செய்கின்றார்........!
தொய்வில்லா எழுத்தாலே
தேமதுர தமிழோசை
உலகமெல்லாம் பரப்புகின்றார்.
மலேசியத் தமிழ் இலக்கியம்
உயர்வை உலகத்தார் போற்றுகின்றார்...........!

படைப்புகளை நூலாக்கும்
முயற்சிதனை எழுத்தாளர்
மரபாகக் கொள்ளுதல் வேண்டும்
மணியான கருவூலங்கள்
மண்ணில் தவழ வேண்டும்
மறைந்தாலும் பெயர் சொல்ல
நூல்கள் வேண்டும் வேள்வியை
நயம்படச் செய்தவர்
பெரியவர் மா.இராமையா..........!

இலக்கிய வானில்
சுதந்திரமாய்ச் சிறகடித்துப் பறந்து 
கதைகளையும் காவியங்களையும்
விதைகளாய் இம்மண்ணில் பதியமிட்ட
பாசத்துக் குரிய மா.இராமையா
பாராட்டுக்குரியவர்................!

பல ஆண்டுகள்
நலமுடன் வாழ வேண்டும்
தேன் சிந்தும் படைப்புகள்
தமிழ்த்தாயின் மனம்
பல்லாண்டுகள் குளிர வேண்டும்...............!

வாழ்த்த நமக்கு வயது
போதாது என்றாலும்
பெரிய மனசு இருக்கிறது
அதுவும் கடல் அளவு
மனதார வாழ்த்துகின்றோம்
வாழ்வீர் பல்லாண்டு......!


முற்றும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை