கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் வே.ம.அருச்சுணன் சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக் கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை
அன்பானந்தனார் விருது பெற்ற எழுத்தாளருக்கு வாழ்த்துகள். 1978இல் மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ் எழுதியவர்தானே அந்தப் பெருமகனார்.
பதிலளிநீக்குஅவர் கலந்து கொண்டு எழுதிய அந்த “மறைமலையடிகளார் பிள்ளைத் தமிழ்” எழுதும் போட்டியில் நானும கலந்துகொண்டு (எனது 19வயதில்) எழுதினேன். மொத்தம் கலந்துகொண்ட 12 பேரில் அன்பானந்தனார் முதலிடமும், அண்மையில் மறைந்த புலவர் இறைக்குருவனார் இரண்டாமிடமும், தமிழண்ணலார் மூன்றாமிடமும் நான் நான்காமிடமு் பெற்றோம். இந்தத் தகவலையே அன்பானந்தனாரின் “மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்” நூலில்தான் பார்த்தேன்.
எனது வலைப்பக்கத்தில் எனது மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களை ஒவ்வொன்றாக இட்டுவருகிறேன். இயலுமேல் பாருங்கள்.
http://valarumkavithai.blogspot.in/
மீண்டும் வாழ்த்துகளும், நன்றிகலந்த வணக்கமும்.
அன்புடன்,
நா.முத்து நிலவன்,
புதுக்கோட்டை - 622 004
நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்கு