கவிதை: தீப்பொறி கவிஞரே
நீங்களுமா
வே.ம.அருச்சுணன்
நாளும் கவிமழை பொழிந்த
தீப்பொறியே நீங்களுமா தீடீரென
எங்களை விட்டு
மறைந்து
விட்டீர்.........!
என்ன கொடுமை
மண்ணின் மணம் பரப்பிய
இலக்கிய ஜாம்பவான்களின்
மரணித்தல் தொடர்கதை தானோ.........!
சிறுகதை மன்னன்
மு.அன்புச்செல்வன்
நாவலாசிரியர்
ப.சந்திரகாந்தம்
தேன்சுவைக் கவிஞர் சீனி
நைனா
புதுமைக்கவிஞர்
பொன்.நாவலன்
தீப்பொறியாரே மனம்
வலிக்கிறது
மறைவை ஏற்க மறுக்கிறது.....!
மரபுக்காகவே பிறப்பெடுத்து
நற்கவி பல புனைந்தீர்
மரபை மீறும் கவிஞரைச்
சுட்டெரிக்கும்
தீப்பொறியே
மரபுக்கவிதை தள்ளாடும்
வேளையிலே
மண்ணை மறந்து விண்ணை
நோக்கி
நெடும் பயணம் சென்றதேனோ........!
தீப்பொறியாய் சொற்கள்
வெடித்தாளும்
யாருக்கும் தீங்கிழைக்கா
பிள்ளை மனம் உனக்கு
மணிக்கவிஞர் படைதனை
நாட்டில்
திரட்டிவிட்டாய் உன்
பணிதனைத்
தொடர்வதற்கு அடித்தளம் அமைத்தீர்
நிறைவான உந்தன் பணிக்கு
வணங்கி
நிற்போம்...........!
கோம்பா ஆறு கவிதை
உன் முகவரி கூறும்
உந்தன் நெரிதனை உலகம்
ஏற்கும்
கவிதனில் மூழ்கிட அறிஞரும்
உன் வழியில் விரும்பிச்
செல்வார்
கவிதையில் வாழ்வினைச்
சொல்வதில்
வல்லோன்
நீயன்றோ.........!
உன்னால் கவியுலகம்
இங்கே
தலை நிமிர்ந்து நின்றது
கவிதைப்பயிர் வேரூன்றியது
மறைவால் உன் சிம்மாசனம்
வெற்றிடமாய்த்
தெரிகிறது
வெறுமையைப் போக்கிட
இனி யார் வருவார்............!
வேற்றுலகம் சென்றாலும்
மரபு செழித்தோங்க வழிசொல்
கவிஞரே
உங்கள் ஆத்மா சாந்தி
பெறட்டும்
என்றும் எங்கள் மனம்
கவர்ந்த கவி நீயன்றோ............!
கருத்துகள்
கருத்துரையிடுக