முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீப்பொறி கவிஞரே நீங்களுமா



கவிதை:    தீப்பொறி கவிஞரே நீங்களுமா   
                    வே.ம.அருச்சுணன் 

நாளும் கவிமழை பொழிந்த
தீப்பொறியே நீங்களுமா தீடீரென
எங்களை விட்டு
மறைந்து விட்டீர்.........!

என்ன கொடுமை
மண்ணின் மணம் பரப்பிய
இலக்கிய ஜாம்பவான்களின்
மரணித்தல் தொடர்கதை தானோ.........!

சிறுகதை மன்னன் மு.அன்புச்செல்வன்
நாவலாசிரியர் ப.சந்திரகாந்தம்
தேன்சுவைக் கவிஞர் சீனி நைனா
புதுமைக்கவிஞர் பொன்.நாவலன் 
தீப்பொறியாரே மனம் வலிக்கிறது
மறைவை ஏற்க மறுக்கிறது.....!  

மரபுக்காகவே பிறப்பெடுத்து
நற்கவி பல புனைந்தீர்
மரபை மீறும் கவிஞரைச்
சுட்டெரிக்கும் தீப்பொறியே
மரபுக்கவிதை தள்ளாடும் வேளையிலே
மண்ணை மறந்து விண்ணை நோக்கி
நெடும் பயணம் சென்றதேனோ........!

தீப்பொறியாய் சொற்கள் வெடித்தாளும்
யாருக்கும் தீங்கிழைக்கா
பிள்ளை மனம் உனக்கு
மணிக்கவிஞர் படைதனை நாட்டில்
திரட்டிவிட்டாய் உன் பணிதனைத்
தொடர்வதற்கு அடித்தளம் அமைத்தீர்
நிறைவான உந்தன் பணிக்கு
வணங்கி நிற்போம்...........!

கோம்பா ஆறு கவிதை
உன் முகவரி கூறும்
உந்தன் நெரிதனை உலகம் ஏற்கும்
கவிதனில் மூழ்கிட அறிஞரும்
உன் வழியில் விரும்பிச் செல்வார் 
கவிதையில் வாழ்வினைச் சொல்வதில்
வல்லோன் நீயன்றோ.........!

உன்னால் கவியுலகம் இங்கே
தலை நிமிர்ந்து நின்றது
கவிதைப்பயிர் வேரூன்றியது
மறைவால் உன் சிம்மாசனம்
வெற்றிடமாய்த் தெரிகிறது
வெறுமையைப் போக்கிட
இனி யார் வருவார்............!

வேற்றுலகம் சென்றாலும்
மரபு செழித்தோங்க வழிசொல் கவிஞரே
உங்கள் ஆத்மா சாந்தி பெறட்டும்
என்றும் எங்கள் மனம் கவர்ந்த கவி நீயன்றோ............!  


                              

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை