************************************
பாப்பாவின் பாவலராம்
பைந்தமிழ்க் காவலராம்
தீப்பார்வை பாராத
தெள்ளுதமிழ் நாவலராம் !
மூப்பிலும் குழந்தைகள்
முன்னேறப் பாடிடுவார்!
யாப்பறிந்தே மலையத்தில்
பாப்புனையும் முரசவராம் !
பூப்போன்ற உளங்கொண்டார்
பொங்குகவி நெடுமாறன் !
காப்பியமாய்க் களஞ்சியத்தை
கனிவோடு வழங்கியவர் !
நாப்பொழியும் தமிழெல்லாம்
நயம்மிக்கப் பண்ணாகும் !
கோப்பையின் மதுநாணும்
கோமகனார் கவிகண்டே !
********************************
எழுத்தாளர் வே.ம.அருச்சுணன்
14.1.2021.
கருத்துகள்
கருத்துரையிடுக