முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார்

                  அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார்
                                     வே.ம.அருச்சுணன்  - மலேசியா       

இந்த நூற்றாண்டில்
மக்கள் அதிகம்
உச்சரித்த பெயர் அப்துல் கலாம்
ஏழையாப் பிறந்தாலும்
உழைப்பால் உயர்ந்து காட்டிய
புனித ஆத்மா..........!

வெட்டியாய்த் திரியாமல்
கனவு காணுங்கள் என்றே
போதிமர புத்தனாய்
இளைஞர் பட்டாளத்து
தளபதியானாய்.......!

அக்கினி பூக்களாய்க்
கருத்துக் கருவூலங்கள்
நாடி நரம்புகளில் பிரளயம் செய்தாய்
நாட்டின் தலைமகன்
தமிழ் உள்ளங்களின் தவப்புதல்வன்
ஆணவம் காணா அறிஞன்
மனிதரில் மாமனிதர்
மனுக்குலத்தின் பிதாமகன்
முத்தானக் கருத்துக்கு மட்டுமே
முகம் காட்டும்
முகமூடி அணியா நெறியாளன்....!

உனது விஞ்ஞானம்
இந்திய மண்ணை உயர்த்தியது
உனது தமிழ் உணர்வு உலகில்
வாழும் தமிழ் இனத்தின் மாண்பை
இமையத்தில் வைத்தது......!

உன்னை நினைத்தால்
நெஞ்சம் புடைக்கிறது
நிறைவாகும் கனவால் உள்ளம்
குதியிட்டு துள்ளுகிறது
யாதும் ஊரே; யாவரும் கேளிர்
ஐ.நா.சபையில் உனது குரல்
தமிழனின் கம்பீரம் தெரிந்தது
தேமதுர தமிழோசை

உலகெங்கும் கேட்டது
தமிழருக்கு மகுடம் நிலையானது
உனது பிறப்பின் பயன் நிறைவானது..............!

உலகத் தமிழருக்கு
நீ தலைவன்
அடுத்த தலைமுறையும் உன்னை
மறவாமல் வணங்கும்
மதத்தால்  வேறுபட்டாலும்
மொழியால் ஒன்றுபட்டே
உணர்வால் உயர்ந்து நிற்பவன்..........!

வாழும் வரைப் போராடியவன்
கணப்பொழுதும் சுணங்காதவன்
அன்பையும் அறிவையும்
குறைவின்றி விதைத்தவன்
தர்மத்தையும் தாய்மையும்
நிலைபெறச் செய்தவன்
இறுதி மூச்சும் மக்களுக்கே  
உன் பதிவை  உலகம் ஏற்கும்
தமிழர்களின்  ஜீவன் நீ அன்றோ...........!
                  முற்றும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை