முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘வந்தாய், வென்றாய், சென்றாய் செழுமைமிகு செர்டாங் முத்தே’




                       வந்தாய், வென்றாய், சென்றாய்    
            செழுமைமிகு செர்டாங் முத்தே                   
                    

                          வே.ம.அருச்சுணன் 

வந்தாய், வென்றாய், சென்றாய்
நீ எடுத்த அவதாரமா?
உழைப்பு....உழைப்பு.....
உழைப்பவனே உயர்ந்தவன்
உலகுக்கு நீ உதாரணம்
எல்.முத்து நீ நல்முத்து.........!

உயிரும் உடலும்
இரத்த வியர்வையில்
தொண்டனுக்கும் நேரமுண்டு
உண்ண, உறங்க, உல்லாசம்
நேரமுண்டு, காலமுண்டு உனக்கோ
உறங்கத்திலும் வேலையுண்டு
மக்கள் தொண்டு மகேசன் தொண்டு
என்னே உன் நியதி......!

பொன்னை விரும்பும் பூமியிலே
தன்னை விரும்பும் மனிதனுண்டு
உன்னை விரும்பும் பிறவியுண்டு
மனிதம் விரும்பும் புத்தன் நீ
நல்லோர் சபைதனிலே
வல்லோர் பட்டியலில் முதல்வன் நீ
வாழ்வை வசப்படுத்தியக் கலைஞன்
மாசற்ற குடும்பத்தலைவன்.........!

வாழ்வில்
கட்டிடக் கலைஞனாய்ப்
பரிணாமத்தைக் கொண்டவனே
பிரமிப்பை ஏற்படுத்தியவன்
இலக்கியம் படைப்பிலும்
திகைப்பை ஏற்படுத்தினாய்
அவை என்றும் நிலைக்கும்
மலேசிய இலக்கியமாய்
தேமதுரத் தமிழோசையாய்
உலகமெல்லாம் எதிரொலிக்கும்
இரட்டைக் கோபுரமாய்
நிலைபெற்று வாழ்வாய்........!

உயர்விலும்
ஒருவரையும் மறந்ததில்லை
உறவுகளைத் தகர்த்ததில்லை
தரம் கெட்டோரை அண்டியதில்லை
நன்மக்களைப் பெற்றாய்
குறையில்லா வாழ்வு தந்தாய்
மாடிவீட்டில் வாழ்ந்தாலும்
மமதையில்லா மனிதர் நீ......!

கோவில் என்றாலும்
கல்விக்கூடம் என்றாலும்
உன் பங்கு ஓங்கி நிற்கும்
நாடியவர் உள்ளம் மகிழ்ச்சியில்
எந்நாளும் துள்ளும்........!

மலேசிய எழுத்தாளர்கள்
அவர்களின் எழுத்துகளை
உரமிட்டு வளர்த்தாய்
உனது மீளா உறக்கம் 
உள்ளத்தை நறுக்கும்
எல். முத்தே; எங்களின் சொத்தே
இறவாப் புகழ் பெற்றவனே
உன் ஆத்மா சாந்தி பெறட்டும்.......!

                                              முற்றும்




                 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை