முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘வந்தாய், வென்றாய், சென்றாய் செழுமைமிகு செர்டாங் முத்தே’




                       வந்தாய், வென்றாய், சென்றாய்    
            செழுமைமிகு செர்டாங் முத்தே                   
                    

                          வே.ம.அருச்சுணன் 

வந்தாய், வென்றாய், சென்றாய்
நீ எடுத்த அவதாரமா?
உழைப்பு....உழைப்பு.....
உழைப்பவனே உயர்ந்தவன்
உலகுக்கு நீ உதாரணம்
எல்.முத்து நீ நல்முத்து.........!

உயிரும் உடலும்
இரத்த வியர்வையில்
தொண்டனுக்கும் நேரமுண்டு
உண்ண, உறங்க, உல்லாசம்
நேரமுண்டு, காலமுண்டு உனக்கோ
உறங்கத்திலும் வேலையுண்டு
மக்கள் தொண்டு மகேசன் தொண்டு
என்னே உன் நியதி......!

பொன்னை விரும்பும் பூமியிலே
தன்னை விரும்பும் மனிதனுண்டு
உன்னை விரும்பும் பிறவியுண்டு
மனிதம் விரும்பும் புத்தன் நீ
நல்லோர் சபைதனிலே
வல்லோர் பட்டியலில் முதல்வன் நீ
வாழ்வை வசப்படுத்தியக் கலைஞன்
மாசற்ற குடும்பத்தலைவன்.........!

வாழ்வில்
கட்டிடக் கலைஞனாய்ப்
பரிணாமத்தைக் கொண்டவனே
பிரமிப்பை ஏற்படுத்தியவன்
இலக்கியம் படைப்பிலும்
திகைப்பை ஏற்படுத்தினாய்
அவை என்றும் நிலைக்கும்
மலேசிய இலக்கியமாய்
தேமதுரத் தமிழோசையாய்
உலகமெல்லாம் எதிரொலிக்கும்
இரட்டைக் கோபுரமாய்
நிலைபெற்று வாழ்வாய்........!

உயர்விலும்
ஒருவரையும் மறந்ததில்லை
உறவுகளைத் தகர்த்ததில்லை
தரம் கெட்டோரை அண்டியதில்லை
நன்மக்களைப் பெற்றாய்
குறையில்லா வாழ்வு தந்தாய்
மாடிவீட்டில் வாழ்ந்தாலும்
மமதையில்லா மனிதர் நீ......!

கோவில் என்றாலும்
கல்விக்கூடம் என்றாலும்
உன் பங்கு ஓங்கி நிற்கும்
நாடியவர் உள்ளம் மகிழ்ச்சியில்
எந்நாளும் துள்ளும்........!

மலேசிய எழுத்தாளர்கள்
அவர்களின் எழுத்துகளை
உரமிட்டு வளர்த்தாய்
உனது மீளா உறக்கம் 
உள்ளத்தை நறுக்கும்
எல். முத்தே; எங்களின் சொத்தே
இறவாப் புகழ் பெற்றவனே
உன் ஆத்மா சாந்தி பெறட்டும்.......!

                                              முற்றும்




                 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...