கவிதை: நூற்றாண்டுகள் கடந்தாலும் 19.3.2020
வே.ம.அருச்சுணன்-
இந்நாடு என்நாடு
பொன்னாடு நன்னாடு
நலம் பெற்று வாழ்ந்த திருநாடு....!
மூவினமும் பெற்ற சுதந்திரம்
இன்றும் கொடி கட்டி பறக்குது
உலகச்சாதனையாய்ப்
பெரிய கொடி,
சுதந்திரக் கொடி
தலை நகரில் பெருமையுடன்
சுதந்திரமாய்ப் பறக்குது
மூவினத்தின் முகத்திலே
வெற்றிக் களிப்பும் தெரியுது...!
சூதும் வாதும்
மக்கள் மனம் ஏற்காது
இந்நாடு
பல்லினமும்,
பலமதமும்,
கலையும் பண்பாடும் கலவையில்
கொண்டாடும் பொன்னாடு
மக்கள் மனம்
ஒருபோதும் மாறுவதுமில்லை
நன்றி மறப்பதுமில்லை....!
இந்த உண்மை
என்றுமே மறைவதுமில்லை
மறைக்க நினைப்போருக்கு
மரண அடியும் தவறுதுமில்லை...!
அன்பும் அமைதியும்
நிலவும் நாட்டில்
நூற்றாண்டுகள் பல கடந்தாலும்
தீவிரம்
ஒருபோது நிலைக்காது
சூழ்ச்சிகள் என்றும் வெல்லாது....!
கருத்துகள்
கருத்துரையிடுக