பன்முகப் படைப்பாளர் அதிகைமணி 26.4.2020
வே.ம.அருச்சுணன்
கவிதையுலகில் தன்னிரில்லா கவிதைகளால் தனி
முத்திரைப் பதித்து பன்முகப் படைப்பாளர் வெ.ஆறுமுகம் எனும் இயற்பெயர் கொண்ட
அதிகைமணி அவர்கள் 17.4.2019 ஆம் நாள் மறைந்து ஓராண்டு நிறையொட்டி,அவரை நினைவும் வகையில்
பல அரிய தகவல்களோடு ஈப்போ ஆசிரியர்
கல்விக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் குணசீலன் சுப்பிரமணியம் அவர்கள் விரிவான கட்டுரை
எழுதிய அன்னாருக்குப் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிள்ளான் வாசியான அவரை நான் பல வேளைகளில்
சந்திப்பது வழக்கம்.தமிழ் மொழிச்சம்பத்தமான எனது சந்தேகங்களுக்குத் அவர் விளக்கம்
தரும் பேராசானாகத் திகழ்ந்தவர்.எதையும் மிகத்தெளிவாகக் கூறுவார்.அவரின் எழுத்துக்கள்
அனைத்தையும் விரும்பி வாசிப்பேன்.பணி ஓவ்வுக்குப் பின் அவரைச் சந்திக்க முடியாமல்
போய்விட்டது.எனினும் நண்பர் ஒருவரின் மூலம்2013 ஆம் ஆண்டு அவரை மீண்டும் சந்தித்து
நீண்ட நேரம் பேசி மகிழ்ந்தேன் எனினும் அவர் மிகவும் அமைதியுடன் காணப்பட்டார்.அவரது
மறைவு மலேசிய இலக்கிய உலகுக்குப்
பேரிழப்பு என்பதை இங்குப் பதிவு
செய்கிறேன்.
-------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக