கவிதை: இல்லார் நல்லார் 3.3.2020
வே.ம.அருச்சுணன்
மக்களை அவமதிக்கும் அரசியலால்
மாண்புகள் காத்திடவே இயலாதாம்
வக்கில்லா வாழ்வே நிலையானால்
வாழ்விலே திண்ணமாய் அழிவாராம்
நக்கலில் வலம்வரும் அற்பர்களால்
நம்பியோர் வாழ்வும் நாசமாகும்
மக்களிதை உணர்ந்தால் மட்டுமே
மானமுடன் வாழ்வது உறுதியாகும்...!
குள்ளநரிக் கூட்டமாகக் கூடிவந்தே
கூடிபேசிக் குடியைக் கெடுத்திடுமே
தள்ளாத வயதென்றும் எண்ணாதே
தாழ்மையுடன் பேசுதலும் மறைத்திடுமே
துள்ளாது மனங்களும் துடித்திடுதே
தூயமனமும் தேய்ந்தே போயிடுமே
வள்ளலாய்க் களவுமனம் கொள்ளுமே
மடுவளவும் வஞ்சகம் மறவாதே...!
எல்லாரும் நலம்காண எண்ணுவோம்
ஏக்கங்கள் மறைந்திட வேண்டுவோம்
மல்லுக்கு நிற்போரை விலக்கிடுவோம்
மனதாரப் பிறநலம்
காத்தே
சொல்லுக்கு உயர்வினைத் தந்தாலே
சோர்விலா வாழ்வும் வந்திடுமே
இல்லாரை நேசித்தலே வாழ்வென்றே
ஈன்றவர் மகிழவே வாழ்த்திடுவோம்...!
கருத்துகள்
கருத்துரையிடுக