முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மலேசியாவில் ‘மௌனம்’ சிற்றிதழ்

கட்டுரை:       மலேசியாவில் மௌனம் சிற்றிதழ்         28.5.2013
                 வே.ம.அருச்சுணன் – மலேசியா
மலேசியாவில் 2009 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை வெளிவரும் தற்காலக் கவிதை சிற்றிதழாகும்.மலேசிய நாட்டின் முன்னணிக் கவிஞர் ஜாசின் ஏ.தேவராசன் அவர்கள் பொறுப்பில் இந்த இதழ் வெளிவருகிறது.
      நினைத்த நேரம் வெளிவரும் இதழ் என்று குறிப்புடன் இலவசமாக வெளியிடப்படும் இவ்விதழில் மலேசிய நவீன கவிதை முன்னணி எழுத்தாளர்கள் பலர் எழுதுவது வழக்கமாகும்.
  மா.சண்முகசிவா,சீ.முத்துசாமி,கோ.புண்ணியவான்,சை.பீர்முகமது,பா.அ.சிவம்,கே.பாலமுருகன்,ந.பச்சைபாலன்,சீ.அருண்,மஹாத்மன் போன்றோரின் எழுத்துகள்  இதழினை வளம் சேர்க்கும் பட்டியலில் முதன்மையானவர்கள்.
       நல்ல பல கவிதைகள் இவ்விதழில் இடம் பெறச்செய்யும் ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.சிறந்த கவிஞர்களின் வட்டத்தை இந்த இதழ் கொண்டிருப்பது தனிச்சிறப்பு.
       புதுக்கவிதைகள் மட்டுமின்றி கருத்துப் பரிமாற்றக் கட்டுரைகள்,விமர்சனம் பலவும் இந்த இதழில் அவ்வப்போது இடம் பெறும்.மலேசிய நவீன படைப்பிலக்கியத்திற்கு இந்த இதழின் பங்களிப்பு வரவேற்கத்தக்கதாகும்.
      தரமான படைப்புகள் மூலம் மலேசிய எழுத்தாளர்களின் திறனை இந்நூல் வெளியுலகிற்கு அறிமுகம் செய்யும் பணியை மிகச் சிறப்பாகச் செய்துவரும் இச்சிற்றிலக்கிய இதழ் தன் இலக்கியப் பயணத்தைத் தொடர வாழ்த்துகிறேன்.

      மின் அஞ்சல் வழி நவீனப் படைப்புகளை அனுப்பலாம்.

      ovilak@yahoo.com.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை