கட்டுரை: மலேசியாவில் ‘மௌனம்’ சிற்றிதழ் 28.5.2013
வே.ம.அருச்சுணன் – மலேசியா
மலேசியாவில் 2009 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை வெளிவரும்
தற்காலக் கவிதை சிற்றிதழாகும்.மலேசிய நாட்டின் முன்னணிக் கவிஞர் ஜாசின் ஏ.தேவராசன்
அவர்கள் பொறுப்பில் இந்த இதழ் வெளிவருகிறது.
‘நினைத்த நேரம்
வெளிவரும் இதழ்’ என்று குறிப்புடன் இலவசமாக வெளியிடப்படும்
இவ்விதழில் மலேசிய நவீன கவிதை முன்னணி எழுத்தாளர்கள் பலர் எழுதுவது வழக்கமாகும்.
மா.சண்முகசிவா,சீ.முத்துசாமி,கோ.புண்ணியவான்,சை.பீர்முகமது,பா.அ.சிவம்,கே.பாலமுருகன்,ந.பச்சைபாலன்,சீ.அருண்,மஹாத்மன் போன்றோரின் எழுத்துகள் இதழினை வளம் சேர்க்கும் பட்டியலில்
முதன்மையானவர்கள்.
நல்ல
பல கவிதைகள் இவ்விதழில் இடம் பெறச்செய்யும் ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.சிறந்த
கவிஞர்களின் வட்டத்தை இந்த இதழ் கொண்டிருப்பது தனிச்சிறப்பு.
புதுக்கவிதைகள்
மட்டுமின்றி கருத்துப் பரிமாற்றக் கட்டுரைகள்,விமர்சனம் பலவும் இந்த இதழில்
அவ்வப்போது இடம் பெறும்.மலேசிய நவீன படைப்பிலக்கியத்திற்கு இந்த இதழின் பங்களிப்பு
வரவேற்கத்தக்கதாகும்.
தரமான
படைப்புகள் மூலம் மலேசிய எழுத்தாளர்களின் திறனை இந்நூல் வெளியுலகிற்கு அறிமுகம்
செய்யும் பணியை மிகச் சிறப்பாகச் செய்துவரும் இச்சிற்றிலக்கிய இதழ் தன் இலக்கியப்
பயணத்தைத் தொடர வாழ்த்துகிறேன்.
மின் அஞ்சல் வழி நவீனப் படைப்புகளை அனுப்பலாம்.
ovilak@yahoo.com.
கருத்துகள்
கருத்துரையிடுக