முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:            பணமூட்டை புகை மூட்டமானது       
                         வே.ம.அருச்சுணன் – மலேசியா
 
சோற்றில் மண்ணைப் போடுதல்
தர்மமாகுமா?
காற்றில் விசத்தைக் கலத்தல்
நீதியாகுமா?
தூய்மைக்காற்றை மாசுபடுத்தல்
நல்லதாகுமா?
மக்கள் தினம் அவதிபடுதல்
மனிதநேயமா?
நோய்கள் தாக்க வழிசெய்தல்
இதயம் தாங்குமா?
 
உலகெங்கும் உன் சொத்து
மதிப்பே பல கோடி
நாளெல்லாம் அதன் பேச்சு
நிம்மதியோ ஓடிப்போச்சு!
 
ஏழை சிறுகுப்பை எரித்தல்
பெரும் குற்றம் நொடியில்
நீதிதேவன் வாசலில் நிற்பான்
கனமுள்ளவன் காட்டை எரிப்பான்
காப்பதற்கும் அரசும் துணைநிற்கும்
தீ அணைப்பதற்கும் வானில்
பணமழை பெய்யும் நீதிகேட்டால்
முக்கியப் புள்ளிகளாம்
மௌனமே பதிலாகும் என்றும்
ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!
 
மக்கள்  அரசு நீதி காக்கும்
பேதமின்றி கண்ணீர் துடைக்கும்
பணமூட்டைகளின் கொட்டம் அடக்கும்
புகைமூட்டக் கண்ணாமூச்சுகள்
காற்றாய்ப் பறந்து போகும்!
 
இயற்கைதனை அழிப்போர்
இறைவனின் எதிரியென்போம்
படைத்தவன் நமக்களித்த
வாழ்வுதனைத் தட்டிப்பறிக்கும்
அரக்கனை அழிப்போம்
பணத்துக்குச் சோரம் போகும்
கொடியோரின் கருவறுப்போம்
தலைமுறையும் துளிர்க்காமல்
காவல் காப்போம்!
செயற்கைப் பேரிடர்
நந்தவனப் பயிர்களும் உயிர்களும்
அற்ப ஆயுளை முத்தமிடல்  
கொடுமையின் உச்சம்!  
 
இறைவனின் அருட்கொடை
மனிதன் இயற்கையை
நேசிப்பதும் சுவாசிப்பதும்
காப்பதும் வாழ்த்துவதும்
உரிமையும் பெற்றவன்!
 
இயற்கையைக் காக்க
உள்ளத்தையும் உயிரையும்
அள்ளித்தருவோம் மடமையில்
எதிர்போரைக் கிள்ளி எறிவோம்
அடுத்த தலைமுறைக்கு இயற்கையை
விட்டுவைப்போம் செழிப்பாய்
அதுவரையில் உயிராய்க்
காத்து நிற்போம்!
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...