:
ஓட்டும் வேட்டும்
வே.ம.அருச்சுணன்
முருகா.....!
தமிழ்க்கடவுளே......!
திக்குத்
தெரியாமல் தவிக்கிறோமே
பத்துமலையில்
வீற்றிருக்கும் முருகனே
விரைவில்
மனமிறங்கி வாருமையா
எங்களுக்கு
நல்லறிவைத் தாருமையா........!
ஐம்பத்தாறு
ஆண்டுகள் மாற்றானை
நம்பி கெட்டதுதான் மிச்சம்
நம்பிக்கை.....நம்பிக்கை
என்றார்
நாட்டுப் பிரதமர்.......!
இந்த
தேர்தல் மூலம்
இந்தியர்
வாழ்வு சிறந்திடுமென்றே
நம்பிக்கை
வைத்தோம்
இன்பமாய்
அன்பளிப்புகள் பெற்றோம்
வயிறு
முட்ட உண்டு மகிழ்ந்தோம்.......!
வேட்பாளர்
பட்டியலில்
சுல்கிப்லி
தலை நிமிர்ந்து நிற்கிறான்
அருகில் பிரதமர்
முகம் மலர்ந்து நிற்கிறார்
துரோகிகளுக்கு
இத்தனை முகங்களா........?
தமிழ்
இனத்தையும் சமயத்தையும்
கொச்சைப்
படுத்தியவனுக்குச் சிம்மாசனம்.......!
நம்பிக்கெட்டது
போதும்
ஓரணியில்
திரண்டிடுவோம்
நாம்
யாரென்பதைப் புரிய வைப்போம்
நல்லாட்சி
மலர்வதற்கு
துணிந்து
நிற்போம்
யாருக்கும்
சோரம் போவாமல்
சத்திய
வாக்கைச் சரியாகச் செலுத்திடுவோம்......!
நம் சந்ததி
அமைதியில்
வாழ்வதற்குப்
போடுவோம் ஓட்டு
வஞ்சகருக்கு வைப்போம் வேட்டு......!
முற்றும்
கருத்துகள்
கருத்துரையிடுக