முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓட்டும் வேட்டும்

:              ஓட்டும் வேட்டும்                                                                 
                            வே.ம.அருச்சுணன்
முருகா.....!
தமிழ்க்கடவுளே......!
திக்குத் தெரியாமல் தவிக்கிறோமே
பத்துமலையில் வீற்றிருக்கும் முருகனே
விரைவில் மனமிறங்கி வாருமையா
எங்களுக்கு நல்லறிவைத் தாருமையா........!

ஐம்பத்தாறு ஆண்டுகள் மாற்றானை
நம்பி  கெட்டதுதான் மிச்சம்
நம்பிக்கை.....நம்பிக்கை
என்றார் நாட்டுப் பிரதமர்.......!

இந்த தேர்தல் மூலம்
இந்தியர் வாழ்வு சிறந்திடுமென்றே
நம்பிக்கை வைத்தோம்
இன்பமாய் அன்பளிப்புகள் பெற்றோம்
வயிறு முட்ட உண்டு மகிழ்ந்தோம்.......!

வேட்பாளர் பட்டியலில்
சுல்கிப்லி தலை நிமிர்ந்து நிற்கிறான்
அருகில் பிரதமர் முகம் மலர்ந்து நிற்கிறார்
துரோகிகளுக்கு இத்தனை  முகங்களா........?
தமிழ் இனத்தையும் சமயத்தையும்
கொச்சைப் படுத்தியவனுக்குச்  சிம்மாசனம்.......!

நம்பிக்கெட்டது போதும்
ஓரணியில் திரண்டிடுவோம்
நாம் யாரென்பதைப் புரிய வைப்போம்
நல்லாட்சி மலர்வதற்கு
துணிந்து நிற்போம்
யாருக்கும் சோரம் போவாமல்
சத்திய வாக்கைச் சரியாகச் செலுத்திடுவோம்......!

நம் சந்ததி அமைதியில்
வாழ்வதற்குப் போடுவோம் ஓட்டு
வஞ்சகருக்கு  வைப்போம் வேட்டு......!


                                             முற்றும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை