முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓட்டும் வேட்டும்

:              ஓட்டும் வேட்டும்                                                                 
                            வே.ம.அருச்சுணன்
முருகா.....!
தமிழ்க்கடவுளே......!
திக்குத் தெரியாமல் தவிக்கிறோமே
பத்துமலையில் வீற்றிருக்கும் முருகனே
விரைவில் மனமிறங்கி வாருமையா
எங்களுக்கு நல்லறிவைத் தாருமையா........!

ஐம்பத்தாறு ஆண்டுகள் மாற்றானை
நம்பி  கெட்டதுதான் மிச்சம்
நம்பிக்கை.....நம்பிக்கை
என்றார் நாட்டுப் பிரதமர்.......!

இந்த தேர்தல் மூலம்
இந்தியர் வாழ்வு சிறந்திடுமென்றே
நம்பிக்கை வைத்தோம்
இன்பமாய் அன்பளிப்புகள் பெற்றோம்
வயிறு முட்ட உண்டு மகிழ்ந்தோம்.......!

வேட்பாளர் பட்டியலில்
சுல்கிப்லி தலை நிமிர்ந்து நிற்கிறான்
அருகில் பிரதமர் முகம் மலர்ந்து நிற்கிறார்
துரோகிகளுக்கு இத்தனை  முகங்களா........?
தமிழ் இனத்தையும் சமயத்தையும்
கொச்சைப் படுத்தியவனுக்குச்  சிம்மாசனம்.......!

நம்பிக்கெட்டது போதும்
ஓரணியில் திரண்டிடுவோம்
நாம் யாரென்பதைப் புரிய வைப்போம்
நல்லாட்சி மலர்வதற்கு
துணிந்து நிற்போம்
யாருக்கும் சோரம் போவாமல்
சத்திய வாக்கைச் சரியாகச் செலுத்திடுவோம்......!

நம் சந்ததி அமைதியில்
வாழ்வதற்குப் போடுவோம் ஓட்டு
வஞ்சகருக்கு  வைப்போம் வேட்டு......!


                                             முற்றும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...