:
பார்த்திங்களா நம்ம
பிழைப்ப 27.5.2013
வே.ம.அருச்சுணன்
சஞ்சியில வந்து
கஞ்சிக்காகப் போராடி
பந்தபாசம் துறந்து
சொந்த நலன் மறந்து
மண்ணுக்காக
உழைச்சவங்க.....!
நாட்டு விசுவாசம்
கடுகளவும் குறையாமல்
மக்களோடு கலந்து
இன்னுயிரைத் தந்து
உருவாக்கிய பூமி
இன்றும் நமக்கு
உயிர் போராட்டம்தான்....!
நம்மீது எவருக்கும்
இரக்கம் இல்லை
உதவுவோரும் இல்லை
இளையோரே
ஊருக்கு உழைத்தது போதும்
சமுதாயம் உயர
நீ என்ன செய்யலாம்
ஆழ்ந்து நோக்கு
வன்முறை வேண்டாம்
நெருப்பாய் உழை....!
முதற்பணி
கல்வியில் கரைசேர்
இரண்டாம் பணி
சுயதொழில்......!
பொருளியல் பலம்
பெருமை தரும்
சமூகம் ஒன்றாகும்
தாய்மொழி நிமிரும்
கலைகள் வளரும்
பண்பாடு ஓங்கும்
உன்னை
உலகம் விமர்சிக்கும்......!
அரசியல்
உன்னை ஆராதிக்கும்
நாட்டின் விதியை முடிவு செய்
எல்லா தகுதிகளும்
பிறப்பிலே உண்டு......!
அம்பிகா
ஒரு விவேகமணி
ஒலித்தார் வெற்றிமணி
சரித்திரம் படைப்பார்
நம்பு வீரமணி.....!
உன்
வீரம், விவேகம்
உச்சம் எட்டும்
பிரித்தாளும் எத்தனம்
திரிந்து போகும்
கிரீடம் வந்தே தீரும்
விதியை மாற்ற
எத்தனுக்கு வலுவில்லை....!
ஒன்றாய்ப் பயணிக்க
ஒன்றுகூடும் இளையோரே
இறையருள், நன்மக்கள்
ஆவலில் சேர்ந்திருக்க
அருகில் இருக்கும்
தவறிய வெற்றியைத் தடுமாறாமல்
கொண்டு வந்திடு....!
கருத்துகள்
கருத்துரையிடுக