முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயிரைக்குடிக்கும் போலிகள்

கவிதை:        உயிரைக் குடிக்கும் போலிகள்            8.6.2013
                 வே.ம.அருச்சுணன் – மலேசியா 

மக்களின் தோழன் காவல்துறை
நேர்த்தியாய் இருந்தது
தொல்லையென்றால்
ஓடோடி வந்து பணி செய்த காலம்
மலையேறிய விட்டதோ
அச்சநிலையில் இன்று மக்கள்
வாழ்கின்றனர்...........!

போலிஸ்சாரா? போலி சாரா?
மக்கள் தோழனா,மக்களின் எதிரியா?
காவல்துறை முகங்களில் இறுக்கம்
மக்களின் மனங்களில் நடுக்கம்..........!

2000 தொடங்கி இன்றுவரை
தடுப்புக்காவலில் 219 மரணங்கள்
பதினொரு நாளில்
நமது ரத்தத்தின்
மூன்று மரண ஓலங்கள்
மக்கள் தினம் செத்துப் பிழைக்கும்
துயரங்கள் தொடர்கதையோ..........?

வேலியே பயிரை மேய்வதேன்?
கள்ளத்தோணியில் இங்கு
வந்தாருக்கும் இல்லை கொடுமைகள்
நமக்கு மட்டும் வரிந்து கட்டி அநீதியேன்.........?

வேண்டாம் அநீதிகள்
சட்டம் எல்லாருக்கும் சமம்
சதிகள் அழியட்டும்
நீதி நிலைபெறட்டும்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்
வாழ்வில் வசந்தம் மலரட்டும்..............!

இளையோர்
பண்பாய் வளரட்டும்
தலைவர்கள் முன்மாதிரியாகட்டும்
உலகெங்கும்
நாட்டுப்புகழ் ஓங்கட்டும்
ஒளிமயமான வாழ்வு அமையட்டும்
ஓரினமாய்
நமது மக்கள் வாழ்வதற்கு
பெருந்தலைவர்கள் மனத்தில்  
இசைவாய் செயல்கள் அமையட்டும்......!

குத்திவிட்டு
வேடிக்கை பார்க்கும்
கொடிய குணங்களை
வேரோடு அறுத்திடுக
நாட்டு அமைதிக்கு அநீதி செய்யும்
தலைவர்களை
நாட்டு நலம் கருதி
தடுப்புக்காவலில் வைத்திடுவோம்......! 

சிறையில் சிதைந்து போன
நம்செல்வங்களின் அனுபவங்கள்
ஆணவத் தலைவர்கள்

தவறாமல் அனுபவிக்கட்டும்...........!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை