புதுக்கவிதை: என்ன அவசரம் சிவம்.....?
புதிதாய்
மலர்ந்த மலரே
உன்
மணம் தென்றலில் கலக்குமுன்னே
நீ
மறைந்து போனது ஏனோ?
என்ன
அவசரம் சிவா?
இறைவன்
உனக்கு அழகைத் தந்தான்
மறக்காமல்
ஆற்றலையும் தந்தான்
சுமைகள்
அதிகம் என்றே
மின்னலாய்ப்
பறந்து போனாயோ?
இந்த
வயதில் செல்வதற்குத்தான்
அளவுடன்
பேசினாயோ?
அன்புடன்
பழகினாயோ?
புன்முறுவலுடன்
அமைதியுடன் இருந்தாயோ?
நிறைகுடம்
தளும்பாது என்றே
எண்ணிக்கொண்டேன்....!
ஏமாந்து
விட்டேன் சிவம்
உன்
எழுத்தால் உலகம் நிமிரும் என்றே
என்னுள்
பெரிய கணக்கு
ஆனால்,
உன்
மறைவு மலேசிய இலக்கியத்தின் சிதைவு...!
இலக்கிய
உலகம் பலரை இழந்திருக்கிறது
ஆனால், இன்றைய
புத்தாக்க உலகில்
உன்னை
இழப்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை
பேரிழப்பு
உன்னை
இழந்தது பேரிழப்புதான்!
கருத்துகள்
கருத்துரையிடுக