முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாற்றிக் காட்டுவோம்


கவிதை:        மாற்றிக் காட்டுவோம்                 18.6.2013
                        வே.ம.அருச்சுணன் 
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
என்றோ சொன்ன வார்த்தை இன்றும்
நன்றே பயன் படுகிறது......!

நூற்றாண்டுகள்  எப்படியோ
வாழ்ந்து விட்டோம் இனி யாரும்  
சிவப்புக் கம்பளம் விரித்து
வண்ண மலர்கள் தூவி
மஞ்சள் சிம்மாசனத்தில் அமர்த்த
அணுசரணையாய்க்  கொடி பிடித்து நம்மை
வரவேற்கப் போவதில்லை......!

நாட்டின் நடப்புகள் நாளும்
நடுக்கத்தைத் தருகின்றன
கனவுகள் நிறைவேறும் சூழல்
மங்களாகத் தெரிகிறது நாட்டின்
சுதந்திரத்துக்குக் கைகொடுத்தும்
வாழ்க்கைப் போராட்டம்
தாளம் தப்பாமல் குதிபோட்டு நிற்கிறது.........!

கவன ஈர்புத் தீர்மானத்தை
சமூகம் உச்சத்தில் கொள்ள வேண்டும்
கரணம் தப்பினால் மரணம்
பிளவுகளை வீசுவிட்டு
தினம் செத்து பிழைக்கும் அவலத்தை
துணிவாய்த் துறந்து
அடிமை விலங்கை உடைத்து
அறியாமையைத் துடைத்து
தலைநிமிர்ந்து
போராட்டத்தைத் தொடங்குவோம்.........!

மொழியைக் காப்பதற்குத்
தமிழ்ப்பள்ளிகளின் ஆயுளை நீட்டிவைப்போம்
பெற்ற பிள்ளைகள் தவறாமல் தாய்பால்
அருந்த வழிகாண்போம்
கலாச்சாரம் அழிவதற்கு சூது
செய்வோரைத் தரைமட்டம் ஆக்கிடுவீர்......!

ஆணவத்தால் அடக்கிவைக்கும்
அவமானச்சின்னங்களை வேரறுப்பீர்
நேற்று முளைத்த காளான்கள்
நம்மை மிரட்டுவதோ?
கிழடுகள் சில வரிந்து நின்றே
சிண்டுமுடிக்கும் வேலைகளைக்
கச்சிதமாய்  முறியடிப்பீர்........!

நம்மைக் கிள்ளுக்கீரையாய்
எண்ணித்திரிவோர் கொட்டம்
அடங்கும் காலம் தொலைவில் இல்லை
நன்றியைக் கொன்று
சதா வம்புக்கு நிற்கும்
ஒற்றுமைக்கு ஊறு செய்யும்
முந்திரிக் கொட்டைகள்
முகத்தில் கரியைப்பூசுவோம்
உலகத்தார் காறி துப்பட்டும்.........!

அறிஞர்கள், கல்விமான்கள்
தொழிலதிபர்கள்,நிபுணர்கள்,
கொடைநெஞ்சர்கள்,இலக்கியவாதிகள்,
கலைஞர்கள்,தொண்டர்கள்,
தியாகிகள்,அரசியல்வாதிகள்
வழக்கறிஞர்கள்,இளைஞர்கள்
இனமானம் காக்க இன்றே
ஒன்றாய்  எழுவோம்
நாட்டின் தலையெழுத்தை

மாற்றிக் காட்டுவோம் வாரீர்......!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை