முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாலியின் புகழ் வாழியவே.....!



புதுக்கவிதை: வாலியின் புகழ் வாழியவே.....!    19.7.2013
                        வே.ம.அருச்சுணன்

தமிழைக் கற்றவருக்கு
ஆயுள் நீளம் என்பார்
உன் நாவில் விளையாடியது
தேன் சிந்தும் தமிழ் அல்லவா.....!

மனம் குளிர்ந்த தமிழன்னை
உமக்கு நீண்ட ஆயுளைத்தந்தார்
82 அகைவையிலும் இளசுகளின்
உள்ளங்களைத் துள்ளல் நடை போடவைத்த
வாலிபக் கவிஞன் நீ...........!

அற்புதக் கவிகளால்
கவியரசு கண்ணதாசன் மனம்
கவர்ந்த கவிஞனே
கலைஞர் காவியம் பாடியக்
காவியக் கவிஞனே
உனைத்தவிர வேறு யாரும் அப்படியொரு
காவையத்தைச் செதுக்கி இருக்க முடியாது..............!

பெற்ற அன்னை இட்டபெயர் இரங்கராஜன்
தமிழ் அன்னை சூட்டிய பெயர் வாலி
பாடல்களின் பிரம்மனே
வாலியின் பெயரே உனை
சிகரத்தில் நிறுத்தியது
மக்களின் மனங்களில் குதி போட்டு நின்றது.........!

நீ வடித்த பாடல்கள் சாகா வரம் பெற்றவை
பத்தாயிரம் பாடல்கள் தந்து
தமிழுள்ளங்களைக் குளிர வைத்தாய்
கேட்போர் வாழ்வை நிமிரவைத்தாய்............!

இரவும் பகலும் உன்
கடும் உழைப்பை கண்டு உன்னிடம்
இயற்கை உன்னிடம் தலை வணங்கியது
உழைப்பே மனிதனை உயர்த்தும்
என்பதற்கு  ஓர் உதாரணம்
தன்னம்பிக்கையின் சக்ரவர்த்தி நீ.........!

சோதனைகளைச் சாதனையாக்கிய
கவிஞ்சனே பல்லாண்டுகள் இன்னும்
வாழ்வாய் என்ற கணக்கில்
மண் விழுந்து விட்டதே
தரைமேல் பிறக்க வைத்த இறைவன்
எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்.........!


நீ மறைந்தாலும்
உன் வைர வரிகள் பல்லாண்டுகள்
எங்களை வாழவைக்கும்
வாழியவே உன் புகழ்.............!




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...