முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழினம் எழுச்சி கொள்ளும் தீபத்திருநாள்


     தமிழினம் எழுச்சி கொள்ளும் தீபத்திருநாள்                
                                    வே.ம.அருச்சுணன்


நினைக்கும் போதே
இனிக்கும் தீபாவளி
வருடத்திற்கு ஒருமுறை
உள்ளத்தைக் கிள்ளிச் செல்கிறது............!

உலகில்
இந்துகளை ஒன்றிணைக்கும்
மந்திரச் சொல் தீபாவளி
ஏழையும் பணக்காரனும் துயர் மறந்து
உற்றார் உறவினர் மனம் திறந்து
பாசமும் நேசமும் உள்ளம் நிறைந்து
மங்களத் தீபாவளியைக்
கொண்டாடி மகிழ்வோம்............!


அன்று
தோட்டத்தில் ஓரினமாய்த் திரண்டோம்
இன்று
பட்டணத்தில் பல பிரிவுகளாய்ப் பிரிந்தோம்
நன்னாளிலும் சிதறுண்டு போனோம்
வேற்றுமையில்
தொடராய்த் தமிழினம்
கண்மூடிச் செல்வது
பல்லின நாட்டில் நமக்கு
இழப்புகள் மிகுதியாய்க்
கைகோர்க்கும்............!

இருள் மறைந்து ஒளிதரும்
சீர்மிகு திருநாளில்
தமிழினம் எழுச்சிக் கொள்ளட்டும்
சகோதரத்துவம் மீண்டும்
வீருகொண்டு எழட்டும்
ஒற்றுமையாய்த் திருநாளை
மகிழ்வுடன் கொண்டாடி மகிழ்வோம்.............!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென்போம்
தமிழர்கள் ஒற்றுமையாய்
வாழ்ந்து காட்டுவோம் மனதில்
உறுதி கொள்வோம் இந்நாளில்........!

பகை மறப்போம் பாசம் வளர்ப்போம்
ஒன்றுபட்ட தமிழரினம்
தலைநிமிர்ந்தே வாழவேண்டும்
நம்மை பிரிக்க நினைப்போருக்குச்
சொல்லி வைப்போம் விரைவில்
வெற்றித் திலகமிடுவோம்
ஒன்றுபட்ட தினமே உலகத்
தமிழர்களுக்குத் தீபத்திருநாள்..............!

தமிழர்கள் சிறந்தோர் ஆளப்பிறந்தோர்
தீபத்திருநாளில் நம்பிக்கையோடு
தீபத்தை ஏற்றுவோம் அனைவருக்கும்

தீபாவளி நல்வாழ்த்துகள்............!    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாமன் மச்சான் விளையாட்டு

            மாமன் மச்சான் விளையாட்டு                                       வே.ம.அருச்சுணன்  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘ சிவாஜி போஸ் ’    இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல் , வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான் இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த் தமிழன் முதுகில்   பவனிவரலாம் அல்லவா ? தேர்தல் கொள்ளையுரையைப் பவிசுடன் அறிவிக்கிறார் ...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:             பணமூட்டை புகை மூட்டமானது                                  வே.ம.அருச்சுணன் – மலேசியா   சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா ? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா ? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா ? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா ? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா ?   உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு!   ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!   மக்கள்  அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் ...