முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழினம் எழுச்சி கொள்ளும் தீபத்திருநாள்


     தமிழினம் எழுச்சி கொள்ளும் தீபத்திருநாள்                
                                    வே.ம.அருச்சுணன்


நினைக்கும் போதே
இனிக்கும் தீபாவளி
வருடத்திற்கு ஒருமுறை
உள்ளத்தைக் கிள்ளிச் செல்கிறது............!

உலகில்
இந்துகளை ஒன்றிணைக்கும்
மந்திரச் சொல் தீபாவளி
ஏழையும் பணக்காரனும் துயர் மறந்து
உற்றார் உறவினர் மனம் திறந்து
பாசமும் நேசமும் உள்ளம் நிறைந்து
மங்களத் தீபாவளியைக்
கொண்டாடி மகிழ்வோம்............!


அன்று
தோட்டத்தில் ஓரினமாய்த் திரண்டோம்
இன்று
பட்டணத்தில் பல பிரிவுகளாய்ப் பிரிந்தோம்
நன்னாளிலும் சிதறுண்டு போனோம்
வேற்றுமையில்
தொடராய்த் தமிழினம்
கண்மூடிச் செல்வது
பல்லின நாட்டில் நமக்கு
இழப்புகள் மிகுதியாய்க்
கைகோர்க்கும்............!

இருள் மறைந்து ஒளிதரும்
சீர்மிகு திருநாளில்
தமிழினம் எழுச்சிக் கொள்ளட்டும்
சகோதரத்துவம் மீண்டும்
வீருகொண்டு எழட்டும்
ஒற்றுமையாய்த் திருநாளை
மகிழ்வுடன் கொண்டாடி மகிழ்வோம்.............!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென்போம்
தமிழர்கள் ஒற்றுமையாய்
வாழ்ந்து காட்டுவோம் மனதில்
உறுதி கொள்வோம் இந்நாளில்........!

பகை மறப்போம் பாசம் வளர்ப்போம்
ஒன்றுபட்ட தமிழரினம்
தலைநிமிர்ந்தே வாழவேண்டும்
நம்மை பிரிக்க நினைப்போருக்குச்
சொல்லி வைப்போம் விரைவில்
வெற்றித் திலகமிடுவோம்
ஒன்றுபட்ட தினமே உலகத்
தமிழர்களுக்குத் தீபத்திருநாள்..............!

தமிழர்கள் சிறந்தோர் ஆளப்பிறந்தோர்
தீபத்திருநாளில் நம்பிக்கையோடு
தீபத்தை ஏற்றுவோம் அனைவருக்கும்

தீபாவளி நல்வாழ்த்துகள்............!    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...