முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழினம் எழுச்சி கொள்ளும் தீபத்திருநாள்


     தமிழினம் எழுச்சி கொள்ளும் தீபத்திருநாள்                
                                    வே.ம.அருச்சுணன்


நினைக்கும் போதே
இனிக்கும் தீபாவளி
வருடத்திற்கு ஒருமுறை
உள்ளத்தைக் கிள்ளிச் செல்கிறது............!

உலகில்
இந்துகளை ஒன்றிணைக்கும்
மந்திரச் சொல் தீபாவளி
ஏழையும் பணக்காரனும் துயர் மறந்து
உற்றார் உறவினர் மனம் திறந்து
பாசமும் நேசமும் உள்ளம் நிறைந்து
மங்களத் தீபாவளியைக்
கொண்டாடி மகிழ்வோம்............!


அன்று
தோட்டத்தில் ஓரினமாய்த் திரண்டோம்
இன்று
பட்டணத்தில் பல பிரிவுகளாய்ப் பிரிந்தோம்
நன்னாளிலும் சிதறுண்டு போனோம்
வேற்றுமையில்
தொடராய்த் தமிழினம்
கண்மூடிச் செல்வது
பல்லின நாட்டில் நமக்கு
இழப்புகள் மிகுதியாய்க்
கைகோர்க்கும்............!

இருள் மறைந்து ஒளிதரும்
சீர்மிகு திருநாளில்
தமிழினம் எழுச்சிக் கொள்ளட்டும்
சகோதரத்துவம் மீண்டும்
வீருகொண்டு எழட்டும்
ஒற்றுமையாய்த் திருநாளை
மகிழ்வுடன் கொண்டாடி மகிழ்வோம்.............!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென்போம்
தமிழர்கள் ஒற்றுமையாய்
வாழ்ந்து காட்டுவோம் மனதில்
உறுதி கொள்வோம் இந்நாளில்........!

பகை மறப்போம் பாசம் வளர்ப்போம்
ஒன்றுபட்ட தமிழரினம்
தலைநிமிர்ந்தே வாழவேண்டும்
நம்மை பிரிக்க நினைப்போருக்குச்
சொல்லி வைப்போம் விரைவில்
வெற்றித் திலகமிடுவோம்
ஒன்றுபட்ட தினமே உலகத்
தமிழர்களுக்குத் தீபத்திருநாள்..............!

தமிழர்கள் சிறந்தோர் ஆளப்பிறந்தோர்
தீபத்திருநாளில் நம்பிக்கையோடு
தீபத்தை ஏற்றுவோம் அனைவருக்கும்

தீபாவளி நல்வாழ்த்துகள்............!    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை