கவிதை: மேற்கு சூரியன் முத்தமிடுவான் 17.1.2015 வே.ம.அருச்சுணன் - மலேசியா
சிறப்புக்குரிய உலகத்தமிழர்
வெட்கம்,மானம்,ரோசம் மிகுந்தவர்கள்
நிகரில்லா வாழ்வுக்கு
அன்னியோனியமானவர்கள்........!
ஆனால்......! ஆனால்......!
மலேசியத் தமிழர்கள்
புதிரானவர்கள் புரியாதவர்கள்
எவரைப்பற்றியும் கவலைப்படாத நாரதர்கள்..........!
சஞ்சிக்கூலிகளின் வரலாற்றை
காற்றில் பறக்கவிடுபவர்கள்
பெற்ற தாயை நடுவீதியிலே நிற்கவைத்துக்
கரகாட்டம் போடும் தற்குறிகள்
மொழி மறந்து இனம் துறந்து
சொந்த பணத்தில் சூனியம் வைத்து
கொக்கரிக்கும் கழுத்திழந்த சேவல்கள்
சுயநலப்பேர்வழிகள்.........!
யார் எப்படி போனால் என்ன
தான்மட்டும் வாழ வேண்டும்
சாதிச் சுனாமியில் சிக்குண்டு
உருகுழைந்து மட்டிகள்
சொல் புத்தியோ,சுய
புத்தியோ
பகுத்தறிவிழக்கும் பிண்டங்கள்
வேடம் தரிக்கும் குள்ள நரிகள் பல்லினமும்
எள்ளி நகையாடச் செய்யும் கெடுமதியினர்............!
வள்ளுவனை முற்றாய் மறந்தவர்கள்
வாழ்வைச் சூதாட்டமாக்கியவர்கள் பல்லாண்டு
நல்லொளி காணா உணர்வு மங்கியவர்கள்...........!
செந்தமிழைக் கற்க கையேந்தும்
இவனா தமிழன் வெட்கக்கேடு
இவன் திருந்த இரண்டாயிரமாண்டுகளாகும்..........!
இனவுணர்வை அழிக்கும் அரசியல்
கோணங்கிகள் ஒழிந்தால் மட்டுமே இங்கே
தமிழன் நிலைப்பான் இன்றேல்
மேற்கு சூரியன் முத்தமிடுவான்............!
முற்றியது
கருத்துகள்
கருத்துரையிடுக