முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிதை: மேற்கு சூரியன் முத்தமிடுவான்


 

கவிதை:             மேற்கு சூரியன் முத்தமிடுவான்       17.1.2015                                                        வே.ம.அருச்சுணன் - மலேசியா 

 

சிறப்புக்குரிய உலகத்தமிழர்

வெட்கம்,மானம்,ரோசம் மிகுந்தவர்கள்

நிகரில்லா வாழ்வுக்கு

அன்னியோனியமானவர்கள்........!

 

ஆனால்......! ஆனால்......!

மலேசியத் தமிழர்கள்

புதிரானவர்கள் புரியாதவர்கள்

எவரைப்பற்றியும் கவலைப்படாத நாரதர்கள்..........!

 

சஞ்சிக்கூலிகளின் வரலாற்றை

காற்றில் பறக்கவிடுபவர்கள்

பெற்ற தாயை நடுவீதியிலே நிற்கவைத்துக்

கரகாட்டம் போடும் தற்குறிகள்

மொழி மறந்து இனம் துறந்து

சொந்த பணத்தில் சூனியம் வைத்து

கொக்கரிக்கும் கழுத்திழந்த சேவல்கள்

சுயநலப்பேர்வழிகள்.........!

 

யார் எப்படி போனால் என்ன

தான்மட்டும் வாழ வேண்டும்

சாதிச் சுனாமியில் சிக்குண்டு

உருகுழைந்து மட்டிகள்

சொல் புத்தியோ,சுய புத்தியோ

பகுத்தறிவிழக்கும் பிண்டங்கள்

வேடம் தரிக்கும் குள்ள நரிகள் பல்லினமும்

எள்ளி நகையாடச் செய்யும் கெடுமதியினர்............!

 

வள்ளுவனை முற்றாய் மறந்தவர்கள்

வாழ்வைச் சூதாட்டமாக்கியவர்கள் பல்லாண்டு

நல்லொளி காணா உணர்வு மங்கியவர்கள்...........!

 

செந்தமிழைக் கற்க கையேந்தும்

இவனா தமிழன் வெட்கக்கேடு

இவன் திருந்த இரண்டாயிரமாண்டுகளாகும்..........!

 

இனவுணர்வை அழிக்கும் அரசியல்

கோணங்கிகள் ஒழிந்தால் மட்டுமே இங்கே

தமிழன் நிலைப்பான் இன்றேல்

மேற்கு சூரியன் முத்தமிடுவான்............!

                                          முற்றியது           

                  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை