முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாக்கம்



 கவிதை:                          தாக்கம்                   27.6.2020                                                                            

தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                         
    தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை
தமிழரும் முயன்றும் எழுந்திட  வில்லை   
     தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை
அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை 
     ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்    
இமயம்போல் வெற்றிதனை உறுதி  செய்வீர்    
      ஈடற்ற அறிவாலே  அகிலம் வெல்வீர்....!

முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்      
      மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும்
அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு
        ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து
இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்
         இமயம்போல் வெற்றியினை இனம் பெறக  
உயர்வினை நோக்கியே  ஊக்கம்  கொள்க
        உலகத்தார் வணங்கிடும் நன்னாள் கூட்டு....!

துயரமின்றி வாழ்வதற்குத் முயற்சி செய்க      
        தூற்றலில்லா பெருவாழ்வு தளராது தருக    
உயர்வான பொருளியலே வாழ்வின் உச்சம் 
       உழைப்பின் தாக்கத்தால் உன்னதம் அமைத்திடு
அயலவரும் முனைப்புடன் இனம்  காப்பாய்
        அயராமல் உழைத்தே எளிதில்  வென்றிடு  
இயலுமட்டும் உழைத்தாலே கனவும் கைக்கூடும்
      ஈயும்குணத்தால் துன்பங்கள் தூளா கிடுமே!

பல்லினம் மக்களால் பலம் சேர்த்திடு
     பார்புகழைப் பெற்றிடவே நாளும்  முந்திடு
எல்லையிலா வாழ்வுதனில் தமிழரும் உயர்த்திடு  
      ஏக்கங்கள் போக்கிடவே உழைத்து  முனைந்திடு   
இல்லாமை போக்கிடவே துணிவாய்  இயங்கிடு
      இனிதாக வாழ்வதற்குப் பாசம் காட்டு  
 நில்லாபெரு வாழ்வும் நீங்காமல்  உழைத்திடு
      நீக்கமற புதுவாழ்வும் உணர்வில் புகுத்தி விடுக...!

தொல்லைகள் மறந்திடவே அறவழி செல்வீர்  
        தோற்றிடும் வரலாற்றை வேருடன் பிடுங்கிடு
வெல்லும் வழிதனில் நயமுடன் சென்றிடு  
       வெற்றிகள் குவிந்திடவே  உள்ளம் வளர்த்திடு
எல்லையற்ற அன்பாலே இணைந்து வாழ்ந்திடு  
       ஏங்கிடும் உள்ளங்கள் அமைதிக்கு உதவிடு 
வல்லமை மிகுந்திட்ட இனமாக நிலை பெறுக
       வாடியமுகமும் வடிந்தோடும் கண்ணீர் தடுத்திடு...! 

இனத்தால் ஒற்றுபட்டு நாடு வளர்திடு    
    இணைந்திடும் பண்பாலே பல்லினம் காத்திடு  
தன்னிகரில்லா இனத்தைப் பெறவே இயங்கிடு      
    தானங்களால் தர்மங்களால்  ஏழைகள் காத்திடு  
மனத்தாலே ஓரினமாய் வாழவே ஊக்கமளி
     மாசற்ற குணத்தாலே குவலயம் போற்று   
தினம்பூக்கும் புதுமலராகப் பூரிப்பு பெருக்கு
     தீபச்சுடராய் ஒளிபடைத்த  இனமாய்  நிமிர்த்திடு...!

துயரத்தின் தாக்கத்தால் கோவிட்-19  வந்தது  
      தொலைநோக்கில் மருத்துவம் மதியில்  கண்டோம் 
அயர்விலா உழைப்பாலே உயிர் காத்தோம்
      ஆண்டவன்  துணையுடன் மனிதரை மீட்டோம்    
 நயமுடன் நன்மைகள் பெருகிட முயன்றோம்
       நலமுடனே  வெற்றிதனைக் குவித்து மகிழ்ந்தோம்      
கயவரின் கொட்டங்கள் தகர்த்து விட்டோம்
      காலமினி நமதென்றே  பாடி மகிழ்திடு...!

மங்கிடா தாக்கத்தாலே வாழ்வில் நிமிர்ந்திடு
      மண்ணுயிரும் மகிழ்ந்திடவே  மனிதம் காட்டு    
எங்குமே நம்மினமும்  எளிமையில் தொடர்க
      எத்துயரும் தாக்கினாலும் எழுச்சி தூக்கிடு
சிங்கங்கமென வீரமுடனே  தர்மம் தொடர்க
       சீர்பெற்றே இனமாகவே சரித்திரம் படைத்திடு
தாங்கிடும் மக்களென்றே கீர்த்தி காட்டிடுக
       தமிழனாய்த் தரமுயர்ந்தே எழுச்சி கொள்வோம்.....!

                                          நிறைவுற்றது


            
            
 
      
   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...