முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாக்கம்



 கவிதை:                          தாக்கம்                   27.6.2020                                                                            

தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                         
    தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை
தமிழரும் முயன்றும் எழுந்திட  வில்லை   
     தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை
அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை 
     ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்    
இமயம்போல் வெற்றிதனை உறுதி  செய்வீர்    
      ஈடற்ற அறிவாலே  அகிலம் வெல்வீர்....!

முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்      
      மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும்
அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு
        ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து
இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்
         இமயம்போல் வெற்றியினை இனம் பெறக  
உயர்வினை நோக்கியே  ஊக்கம்  கொள்க
        உலகத்தார் வணங்கிடும் நன்னாள் கூட்டு....!

துயரமின்றி வாழ்வதற்குத் முயற்சி செய்க      
        தூற்றலில்லா பெருவாழ்வு தளராது தருக    
உயர்வான பொருளியலே வாழ்வின் உச்சம் 
       உழைப்பின் தாக்கத்தால் உன்னதம் அமைத்திடு
அயலவரும் முனைப்புடன் இனம்  காப்பாய்
        அயராமல் உழைத்தே எளிதில்  வென்றிடு  
இயலுமட்டும் உழைத்தாலே கனவும் கைக்கூடும்
      ஈயும்குணத்தால் துன்பங்கள் தூளா கிடுமே!

பல்லினம் மக்களால் பலம் சேர்த்திடு
     பார்புகழைப் பெற்றிடவே நாளும்  முந்திடு
எல்லையிலா வாழ்வுதனில் தமிழரும் உயர்த்திடு  
      ஏக்கங்கள் போக்கிடவே உழைத்து  முனைந்திடு   
இல்லாமை போக்கிடவே துணிவாய்  இயங்கிடு
      இனிதாக வாழ்வதற்குப் பாசம் காட்டு  
 நில்லாபெரு வாழ்வும் நீங்காமல்  உழைத்திடு
      நீக்கமற புதுவாழ்வும் உணர்வில் புகுத்தி விடுக...!

தொல்லைகள் மறந்திடவே அறவழி செல்வீர்  
        தோற்றிடும் வரலாற்றை வேருடன் பிடுங்கிடு
வெல்லும் வழிதனில் நயமுடன் சென்றிடு  
       வெற்றிகள் குவிந்திடவே  உள்ளம் வளர்த்திடு
எல்லையற்ற அன்பாலே இணைந்து வாழ்ந்திடு  
       ஏங்கிடும் உள்ளங்கள் அமைதிக்கு உதவிடு 
வல்லமை மிகுந்திட்ட இனமாக நிலை பெறுக
       வாடியமுகமும் வடிந்தோடும் கண்ணீர் தடுத்திடு...! 

இனத்தால் ஒற்றுபட்டு நாடு வளர்திடு    
    இணைந்திடும் பண்பாலே பல்லினம் காத்திடு  
தன்னிகரில்லா இனத்தைப் பெறவே இயங்கிடு      
    தானங்களால் தர்மங்களால்  ஏழைகள் காத்திடு  
மனத்தாலே ஓரினமாய் வாழவே ஊக்கமளி
     மாசற்ற குணத்தாலே குவலயம் போற்று   
தினம்பூக்கும் புதுமலராகப் பூரிப்பு பெருக்கு
     தீபச்சுடராய் ஒளிபடைத்த  இனமாய்  நிமிர்த்திடு...!

துயரத்தின் தாக்கத்தால் கோவிட்-19  வந்தது  
      தொலைநோக்கில் மருத்துவம் மதியில்  கண்டோம் 
அயர்விலா உழைப்பாலே உயிர் காத்தோம்
      ஆண்டவன்  துணையுடன் மனிதரை மீட்டோம்    
 நயமுடன் நன்மைகள் பெருகிட முயன்றோம்
       நலமுடனே  வெற்றிதனைக் குவித்து மகிழ்ந்தோம்      
கயவரின் கொட்டங்கள் தகர்த்து விட்டோம்
      காலமினி நமதென்றே  பாடி மகிழ்திடு...!

மங்கிடா தாக்கத்தாலே வாழ்வில் நிமிர்ந்திடு
      மண்ணுயிரும் மகிழ்ந்திடவே  மனிதம் காட்டு    
எங்குமே நம்மினமும்  எளிமையில் தொடர்க
      எத்துயரும் தாக்கினாலும் எழுச்சி தூக்கிடு
சிங்கங்கமென வீரமுடனே  தர்மம் தொடர்க
       சீர்பெற்றே இனமாகவே சரித்திரம் படைத்திடு
தாங்கிடும் மக்களென்றே கீர்த்தி காட்டிடுக
       தமிழனாய்த் தரமுயர்ந்தே எழுச்சி கொள்வோம்.....!

                                          நிறைவுற்றது


            
            
 
      
   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாமன் மச்சான் விளையாட்டு

            மாமன் மச்சான் விளையாட்டு                                       வே.ம.அருச்சுணன்  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘ சிவாஜி போஸ் ’    இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல் , வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான் இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த் தமிழன் முதுகில்   பவனிவரலாம் அல்லவா ? தேர்தல் கொள்ளையுரையைப் பவிசுடன் அறிவிக்கிறார் ...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:             பணமூட்டை புகை மூட்டமானது                                  வே.ம.அருச்சுணன் – மலேசியா   சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா ? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா ? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா ? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா ? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா ?   உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு!   ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!   மக்கள்  அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் ...