முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொள்வோம் செல்வாக்கு


ஆச
புதுக்கவிதை:           கொள்வோம் செல்வாக்கு    
                             வே.ம.அருச்சுணன் – மலேசியா 
வாக்கு
உன்னைக் காட்டும்
நீ  நல்லவனா, கெட்டவனா
என்பதை மறைக்காமல் உலகுக்கு சுட்டும்.

அருளாளர்
அளிப்பார் நல்வாக்கு
அதை ஏற்றால்
உனக்குச்  செல்வாக்கு.

நல்லோர்
வழங்கிடும் வாக்கினிலே
நன்மைகள் பெருகிடும் உலகினிலே
சத்திய வாக்கு நிலைத்தாலே
பிறந்திடும்  நித்தம் சுகவாழ்க்கை.

வாக்கு அளிப்பது எளிதாகும்
அதைக் காப்பது என்றும் அரிதாகும்
நியதியை  உணர்ந்து
துல்லியமாய்ச் செயல் பட்டால்
ஏளனம் உன் வாழ்வில்
நிலைக் கொள்ளா.

தேர்தல் களத்தில்
உன் வாக்குப் பொன் வாக்கு
அரசியல்வாதிக்கோ  உயிர் வாக்கு
உனக்குத் தருவார் பல வாக்கு
தாளம் தப்பாமல்
பாடுவார் கடவுள் வாழ்த்து.

அறிந்து வாக்களித்தால்
அமைந்திடும் நல்லரசு
அறியாமை வாக்கால்
அமைந்திடும் பேய் அரசு.

ஐந்து ஆண்டுகளுக்கு
ஒரு முறை வரும்
அதிர்ஸ்ட தேவதையை
முறையாய்க் கவனித்துப்பார்
அறிவுக்கண்ணைத் திறந்து பார்
ஆத்மாவைக் கேட்டுப்பார்  
அடுத்துவரும் தலைமுறையை
நினைத்துப் பார்
நிலையான வாழ்வு உறுதியா
என்றே அலசிப்பார்.

பச்சிளங்குழந்தையின் முகத்தைப் பார்
பால் தரும் அரசை எண்ணிப் பார்.


வாக்கை அளிக்கும் முன்னே
ஒரு கணம்..... ஒரே கணம்
ஞானத்தை அள்ளித் தந்த
பத்துமலை முருகனை நினைத்துப் பார்
நடந்தவற்றை மீள்பார்வை செய்துப்பார்.

உன் கையைக் கொண்டுதான் நீ
கரணம் போடவேண்டுமல்லவா ?
தெளிவுடனே
அளித்திடு  நல்வாக்கு
கொள்வோம்  செல்வாக்கு....!

                     முற்றும்





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை