புதுக்கவிதை: புத்தாண்டே
புதுவாழ்வைத் தந்திடுக...!
வே.ம. அருச்சுணன்
அதிர்வையும் அனுபவங்களையும் தந்த
2012 ஆம் ஆண்டே விடை பெறுக
பூத்துக் குலுங்கப் போகும் 2013
ஆம் ஆண்டே
நம்பிக்கை மலர்களை
உள்ளத்தில் நிறைவாய் ஏற்றி
வரவேற்பு கூறுகிறோம்
வளமான வாழ்வை வஞ்சகமின்றி
எனது சமுதாயத்திற்குத் தந்திடுக.....!
பட்ட துன்பம் போதும்
செமத்தியாய் ஏமாந்தது போதும்
மரம் போல் ஏணியாய் நின்றது போதும்
துணிவாய் ஏணியில் திடமாய் ஏறி
வெற்றி வானில் பயணிக்க
வந்திடுக புத்தாண்டே....!
வாழ்வு தந்த பொன் நாடும்
தாய் தந்த செம்மொழியும்
உள்ளத்தில் வைரமாய் மின்னிட
ஒற்றுமை மக்கள் மனதிலே
தேனாய்த் பாய்ந்திட
விரைந்து வந்திடுகப் புத்தாண்டே....!
நாட்டில் நல்லவைப் பிறந்திட
வல்லமை தாராய்ப்
பிணக்குகள் இன்றி
ஒருதாய் மக்களாய்
ஆட்சிக்கட்டிலில்
பேதமின்றி சமமாய்ப் பங்கு தந்து
பல்லின மக்களும்
மகிழ்ந்திட நிறைவான
வாழ்வைத் தந்திடுகப் புத்தாண்டே....!
பாசமும் நேசமும் மக்களிடம் பல்கிட
பல்லின மக்கள் சகிப்புடனே வாழ்ந்திட
வந்திடுக புத்தாண்டே.....!
முடிவு
கருத்துகள்
கருத்துரையிடுக