முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாம் இந்நாட்டு மன்னர்கள்



புதுக்கவிதை:        நாம் இந்நாட்டு மன்னர்கள்     
                வே.ம.அருச்சுணன் - கிள்ளான்

வரலாற்றைத் தொலைத்துவிட்டோம்
வாழ்ந்ததை மறந்துவிட்டோம்
ஏமாளியாய் இருந்துவிட்டோம்
எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்
பொறுப்பற்றத்  தலைவர்களால்
படுகுழியில் தள்ளப்பட்டோம்.....!

கல்வி பெறத்தவறியதால்
முட்டாளாய் ஆகிவிட்டோம்
பல காலம் இருளிலே இருந்ததாலே
கருத்துக் குருடர்களாய் வாழ்ந்து விட்டோம்
படுமோசமாய் வாழ்வில் வீழ்ந்து விட்டோம்
தன்னிலை மறந்து
உண்ணும் சோற்றிலே மண்ணை
வாரிப் போட்டுக் கொண்டோம்......!


வஞ்சகத் தலைவர்களால்
வாழ்வைத் தொலைத்து விட்டோம்
சந்ததிகள் கருகிக் காணாமல் போய்விட்டோம்
நயவஞ்சகர்களின் கால் பிடித்து ஏமாந்து விட்டோம்
பிறரிடம் குட்டு வாங்கினோம்  
பிறர் ஏளனப் பேச்சால் உடல் குறுகினோம்
போதும் போதும் போதும்
இனி ஏமாந்ததுப் போதும்.....!

இனி மனிதனாய் வாழக்கற்றுக் கொள்
தலைவன் உனக்கு  இனி எவருமில்லை
உனக்கு நீயே தலைவன்
எவருக்கும் நீ அடிமையில்லை
சுயமாய்  வாழ உறுதிக்கொள்
வாழ்க்கைப் பாடத்தைப் பெற்றுக் கொள்
சேர்ந்து வாழக் கற்றுக்கொள்
அனுபவம் உனக்குச் செங்கோல்
அது வாழ்வு தரும் மந்திரக் கோல்.....!

நல்லாட்சி  மலர்வதற்கு
சொல்லாட்சி தந்திடுக

நீதியான ஆட்சிதனைத்
துணிவாய்த் தேர்ந்திடுக
கபட நாடகம் போடுவோரை
வேரோடுச் சாய்த்திடு……!

அரை நூற்றாண்டு
கண்ணீரில் மிதந்தது போதும்
தமிழர்கள் இரண்டும் கெட்டவர்கள் என்ற
கெட்டப் பெயரைப் போக்கி
அறிவார்ந்த சமூகமாக
ஓட்டு மூலம் காட்டிடுக.....!

பொன்னான ஆட்சிக்குப்  போடு ஓட்டு
பொல்லாத  ஆட்சிக்கு    வைத்திடு வேட்டு
நம்மை கிள்ளுக்கீரையாக எண்ணுவோரை  
புறம் தள்ளுவோம்
வஞ்ச எண்ணத்தை விதைக்கும்
மகா துரோகிகளைத் தூக்கி எறிவோம்
மலேசிய மக்களின் ஒற்றுமைக்கு
குந்தகம் விளைவிக்கும்
ஊழல் பேர்வழிகளைக் களையெடுப்போம்.....!

நாட்டின் வளங்களைக் கையப்படுத்தி
இனங்களிடையே பிரிவை ஊட்டும்
சுயநலப் பேர்வழிகளை ஒழித்திடுவோம்
நம் நாடு அமைதிப் பூங்காவாக
மீண்டும் உருமாற்றம் பெறுவதற்கு
அணிதிரள்வோம் அரக்கர்களை அழிப்போம்.....!

விவேகமாக வாக்களிப்போம்
வளமான நாட்டை உருவாக்குவோம்
இனியாவது தமிழர்கள் இங்கு
இனமானத்துடன் வாழ்வோம்......!            

                           

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை