கவிதை: மயங்காதே
வே.ம.அருச்சுணன்
நாட்டுக்கு நல்லது செய்ய
நடுநிலையில் சிந்திக்க
நேரம் வந்துடுச்சு
ஐந்தாண்டுக் கொருமுறை
உன்னைத் தேடி வந்துடுச்சு
இந்நாட்டு தலைவிதி
உன் கைக்கு வந்டுச்சு.......!
உன் பேரன் வாழ்வதற்கு
வகை செயும் கட்சிக்கு
ஓட்டளிக்கும் நேரம் வந்துச்சு......!
வாய்ப்பந்தலுக்கு
விடை கொடுக்கும்
காலம் கனிழ்ச்சிடுச்சு
மதியை அடகு வைக்காமல்
மூவினம் வாழும் பூமியை
தோன்றிட உதவிடும் நேரம்
இப்போது வந்டுச்சு......!
அந்த விடியலுக்கு
விரைந்து கைகொடுப்போம்......!
எல்லோரும்
இந்நாட்டு மன்னர்கள்
என்பதை உணர்ந்து
செங்கோல் எடு
நல்லாட்சிக்கு தயங்காமல் ஆணையிடு.....!
நல்வாழ்வு கண்முன்னே
நம்கையில் இருக்கையிலே
முன்னாள் தலைவர் சொன்னார்
நாளைய தலைவர் சொல்வார்
என்றே பிதற்றாமல்
சரியாக இருக்கட்டும் உன்வாக்கு
நான்னாடு பிறக்கும்
சில நாளில்....!
நீ சரியாக இருந்தால்
இன்று சரியாக முடிவைத்தந்தால்
நாளை மக்கள் மனம் கவரும்
மலேசியாவைக் காண்போம்
வகை செய்ய வாரீர்.....!
கருத்துகள்
கருத்துரையிடுக