கவிதை:
மனிதம் வாழ்விக்க வந்தவனே
வே.ம.அருச்சுணன்
இந்த யுகத்தில்
நீ வாழ்ந்ததில்
பெருமையும் பேறும் பெற்றது
உலகம்...........!
பிறவிக்கவிஞ்சனே
உன் அருட்கொடையால்
உலகம் வாழ்ந்தது
மனிதம் உச்சத்தில் கோலோச்சி
புரிந்தது.........!
உன் அமர காவியங்களால்
தமிழின் பெருமை
விண்ணை முத்தமிட்டது
உன் கவிதை வரிகள்
மனிதனின் வாழ்வை நீட்டியது
கயவனைப்
புத்தனாக்கியது.........!
களவையும்
கற்று மறந்தவன் நீ
கபோதிகளுக்கு
வலுக்கும்
சேற்றில் ஊன்றுகோல்
தந்தவன்
நீ
தாயை
மறந்தாலும்
உன்
தர்மத்தை இகழ்ந்திட
யாரும்
முயன்றதில்லை
இறைவன்
உன்னில்
உலாவந்ததை
மறுப்பாரில்லை........!
உடைந்துபோன
மனங்களுக்கு
மருந்தானது
உன் பேச்சு
வரியவர்
வாழ்வை வசப்பட வைத்தாய்
வாழும்
கலைகளை அள்ளித்தந்தாய்
குன்றி
வாழ்ந்தோர்
செழித்தே
வாழ்ந்தார்..........!
கடவுள்
அருளால் வாழ்ந்தோர்
பலரிருக்க
உன் சொல்லால்
வாழ்ந்தவர்
பலகோடி
இது
மிகையில்லை உண்மை
என்றும்
மறைவதில்லை.........!
மனிதனாகப்
பிறந்து
மக்கள்
மனங்களில்
வணங்கும்
தெய்வமானாய் அது
கண்ணன்
காட்டிய வழி..........!
உலகம்
அழியுமட்டும்
தமிழர்களின்
மனங்களில் நீ
சிம்மாசனமிட்டே
கர்சனை செய்வாய்
மக்கள்
நலம் மீண்டிட
தமிழர்
இனம் உயர்தல் வேண்டி நீ
மீண்டும்
பிறக்க வேண்டும்
கண்ணதாசனே
வாழ்க நீ
பல்லாண்டு..........!
கருத்துகள்
கருத்துரையிடுக