முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

MH17 பற்றிய ஆதங்கம்....கவிதையாய்.... வலுவான உறவு வற்றாத கண்ணீர்

கவிதை:    வலுவான உறவு வற்றாத கண்ணீர்    
                   வே.ம.அருச்சுணன் – மலேசியா 

விடியா காலைப் பொழுதில்
இடியாய் வந்தே
இதயத்தைத் துளைத்தே
மக்களைத் துடிக்க வைத்தே
கண்ணீர் கடலில் மிதக்கவைத்தாய்............!

இறைவா இதுவென்ன
அடுக்கான சோதனைகள்?
மாதங்கள் நான்கு நகருவதற்குள்
மற்றுமொரு சோதனையா...............?

வண்ணச்சிறகுகள் பூட்டி சிங்காரமாய்
வானில் கம்பீரமாய்
வலம் வரும் மாஸ்சே நீ
கயவர்களின் சதியால்
தூளாகி மண்ணில் சிதறியக்
காட்சிக் கண்டு மனம்
இனம்,மதம்,மொழி பாராமல்
பதறாத மலேசியர் யாருமுண்டோ...........?
           
உலக மக்கள் பலரை
வாஞ்சையோடு இரண்டு சிறகால்
மலேசிய மண்ணின் மணம்
நுகர்ந்திட ஆவலாய்ப் பறந்து வந்தாய்
வஞ்சகரின் கணைகள்
உன் சிறகொன்றை
நடுவானில் சிதைத்தார் சிற்சில
வினாடிக்குள் 295 ஆத்மாக்கள்
வயல் காட்டில்
அனாதைகளாய்ப் பிணங்களாய்.....!

சுயநலம்
வினாடியில் மனிதம் அஸ்தமனம்
மூன்றாம் போருக்கு ஒத்திகையோ?
இன்னுயிர் போக்கும்
மனிதனின் அடாவடியில்
அமைதி விடைபெற்றது............!

அமைதி தேடி எங்கு சென்றாலும்
கழுகாய்த் தேடும் மனிதனிடம்
உலகம் தப்புமா
மனித உயிர்கள் தப்புமா.............?

பல்லின மக்கள் ஒற்றுமையாய்
வீருகொண்டு நிற்கின்றார்
கொலைக்காரர்களைப் பிடிப்போம்
நீதியை நிலைநாட்டுவோம்
நாம் யார் என்பதை உலகுக்கு
உரக்கமாய்ச் சொல்லிவைப்போம்
வன்முறைக்கு
இறுதிச்சடங்கைச் செய்து வைப்போம்
விழிபிதுங்கச் செய்திடுவோம்
தர்மமே வெல்லும் உலக
நீதியைப் மீண்டும் புகட்டிடுவோம்...........!

மண்ணில் மறைந்தாலும்
உயிரிலும் உணர்விலும்
கலந்துவிட்ட செல்வங்களே
ஆத்மா சாந்திபெற
இறைவனை வேண்டுகிறோம்
என்றும் உங்கள் நினைவை
சுமந்து நிற்போம்
உலக உயர்வுக்கு
நீங்கல் ஆற்றிய
பணிகளுக்கு வற்றாதக் கண்ணீரை
உதிர்த்து நிற்போம்.............!
  




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை