முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இறை கவிஞர் சீனி நைனா மறைந்தாரே!

                இறை கவிஞர் சீனி நைனா மறைந்தாரே!         7.8.2014                    
                          வே.ம.அருச்சுணன்  - மலேசியா

இனிய பேச்சும்
நுண்ணிய கருத்தும்
தொலை நோக்குப் பார்வையும்
வலுவான கருத்தாலும்
பிறவிக் கவிஞராய் மனித மனங்களில்
தடம் பதித்த மாமணியே
திடுமென இறைவனடி சேர்ந்ததேனோ?

கவியுலகின் கலங்கரை விளக்கே
கவியால் வான்புகழ் பெற்றவரே
உனது பிரிவால் கவியுலகம்
கலையிழந்து போனதே
கானக் குயில் குரல் இழந்தே
வாடுதல்  பொறுக்கலையே
கைபிடித்த வளர்ந்த குழந்தை
திசை இழந்து துடிக்குதே
கவிமழை பொழிந்த வானம்
காரிருளில் பொசுங்குதே.........!

உன்
தொல்காப்பிய உரைக்கு
மனம் குளிந்த மனங்கள்
நாட்டில் பலருண்டு
தேனுண்ட வண்டாய் களிப்புற்ற
உள்ளங்கள்
தாங்கள் பல்லாண்டு வாழ்ந்திட  
இறைவனிடம் மண்டியிட்டார்
தொல்காப்பிய விருதும் தந்து
உங்கள் மனம் குளிரவைத்தார்.............!

உந்தன்
கவிமுழக்கம் தொடராய்க் கேட்பதற்கு
நாங்கள் தளமிழந்தோம்
சந்தேகம்
கேட்க இனி யாரிடம் செல்வோம்?

கவிக்கோமானே
எங்களை விட்டு வெகு தூரம்
சென்றதன் நீதி என்ன?
மனுநீத் சோழன் நீதி சொல்வாறா?

கவித்தொண்டு
உந்தன் உயிர் தொண்டு
உங்கள் குரல்
தமிழுலகம் தடம் புரளாமல்
செல்லும் வழி சொன்னீர்
நாளெல்லாம்
உனக்குத் தமிழ்ப்பணிதான்
இலக்கணம் போதித்த ஆசான்
தமிழர் மனம் இனிக்க
எறும்பாய் உழைப்பைத் தந்தாய்
தமிழுக்குத் தொண்டு செய்தோன்
இறப்பதில்லை
நிறைவான தொண்டால்
நிலைத்து நிற்பீர்
வாயார வாழ்த்துகிறோம்
உம் மனம் சாந்திக்கு
கண்ணீரில் கவிபாடுகிறோம்.............!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை