முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏங்கும் சுதந்திரம்


கவிதை:     ஏங்கும் சுதந்திரம்     
 வே.ம.அருச்சுணன் – கிள்ளான்

ஐம்பத்தேழு ஆண்டுகள்
மறைந்த மாயம் தெரியவில்லை
மூன்று இனங்களின்
தொலை நோக்கு நிரந்திரமாய்
அன்னியரின் தொல்லைகள் மாய்தன………..!

ஆகஸ்டு 1957 31
கதிரவன் கண் விழிக்க
அரங்கத்தில் மக்கள்
கடலாய்  நிறைந்திருக்க
பெருமிதம் நெஞ்சில் சுமந்திருக்க  
சுதந்திரத்தந்தை துங்கு
மெர்டேக்கா……..மெர்டேக்கா
ஏழுமுறை சீரிய சிங்கமாய்
உணர்ச்சியின் உச்சத்தில்
சங்கநாதமாய் முழங்கிட
மக்கள் இடியாய்த் தொடர்ந்தனர்.......!

அன்றுதான்
மக்கள் முதல் முறையாக
சுதந்திரக்காற்றை ஆழமாய்ச்
சுவாசிக்கத் தொடங்கினர்………!

இனி ஏழேழு தலைமுறையும்
பிழைத்துக் கொள்ளும்
நம்பிக்கை…..நம்பிக்கை
மக்கள் முகங்கள் பூத்த
மலர்களாய் மணம் வீசின
தெருவெல்லாம் வண்ண மயிலாய் நர்த்தனம்…………!

அடிமை வாழ்வு துறந்துவிட்டோம்
மூவினமும் சமநிகராய் உய்வதற்கு
மண்ணின் மைந்தன் பிறப்புரிமை
போதுமென்றே இறுமார்ந்தே
57 ஆண்டுகள்
கண்மூடி ஒட்டளித்தே
மண்டூகமாய் வாழ்ந்துவிட்டோம்……!

2020 நோக்கி
நாடு வெற்றிப் பயணம்
வானலாவிய கட்டிடங்கள்
ஒருசாராரின் வெற்றிச் சின்னங்கள்
துரோக அரசியலின்
எச்சங்கள்…………..!

சிரித்தே கழுத்தறுத்த
மகா திருடர்கள் நீண்டு வாழ்கின்றார்
அரசியல் பிழை செய்தோருக்குக்
அறமே கூற்றாகும் 
வரலாற்றையே கேலி செய்யும்
இட்லர்களின் தண்டோரா வளர்பிறை
வாசம் தாங்க முடியவில்லை…….!

இருண்ட உலகில்
சந்ததிகளின் வாழ்வு
நமக்கு சுதந்திரம் எப்போது?
மொழி,இனம் மறக்கும் நமக்கு
சுதந்திரம் எப்போது?
பிரிந்து வாழும் நம்மினம்
சுதந்திரம் எப்போது?





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாமன் மச்சான் விளையாட்டு

            மாமன் மச்சான் விளையாட்டு                                       வே.ம.அருச்சுணன்  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘ சிவாஜி போஸ் ’    இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல் , வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான் இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த் தமிழன் முதுகில்   பவனிவரலாம் அல்லவா ? தேர்தல் கொள்ளையுரையைப் பவிசுடன் அறிவிக்கிறார் ...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:             பணமூட்டை புகை மூட்டமானது                                  வே.ம.அருச்சுணன் – மலேசியா   சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா ? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா ? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா ? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா ? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா ?   உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு!   ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!   மக்கள்  அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் ...