முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏங்கும் சுதந்திரம்


கவிதை:     ஏங்கும் சுதந்திரம்     
 வே.ம.அருச்சுணன் – கிள்ளான்

ஐம்பத்தேழு ஆண்டுகள்
மறைந்த மாயம் தெரியவில்லை
மூன்று இனங்களின்
தொலை நோக்கு நிரந்திரமாய்
அன்னியரின் தொல்லைகள் மாய்தன………..!

ஆகஸ்டு 1957 31
கதிரவன் கண் விழிக்க
அரங்கத்தில் மக்கள்
கடலாய்  நிறைந்திருக்க
பெருமிதம் நெஞ்சில் சுமந்திருக்க  
சுதந்திரத்தந்தை துங்கு
மெர்டேக்கா……..மெர்டேக்கா
ஏழுமுறை சீரிய சிங்கமாய்
உணர்ச்சியின் உச்சத்தில்
சங்கநாதமாய் முழங்கிட
மக்கள் இடியாய்த் தொடர்ந்தனர்.......!

அன்றுதான்
மக்கள் முதல் முறையாக
சுதந்திரக்காற்றை ஆழமாய்ச்
சுவாசிக்கத் தொடங்கினர்………!

இனி ஏழேழு தலைமுறையும்
பிழைத்துக் கொள்ளும்
நம்பிக்கை…..நம்பிக்கை
மக்கள் முகங்கள் பூத்த
மலர்களாய் மணம் வீசின
தெருவெல்லாம் வண்ண மயிலாய் நர்த்தனம்…………!

அடிமை வாழ்வு துறந்துவிட்டோம்
மூவினமும் சமநிகராய் உய்வதற்கு
மண்ணின் மைந்தன் பிறப்புரிமை
போதுமென்றே இறுமார்ந்தே
57 ஆண்டுகள்
கண்மூடி ஒட்டளித்தே
மண்டூகமாய் வாழ்ந்துவிட்டோம்……!

2020 நோக்கி
நாடு வெற்றிப் பயணம்
வானலாவிய கட்டிடங்கள்
ஒருசாராரின் வெற்றிச் சின்னங்கள்
துரோக அரசியலின்
எச்சங்கள்…………..!

சிரித்தே கழுத்தறுத்த
மகா திருடர்கள் நீண்டு வாழ்கின்றார்
அரசியல் பிழை செய்தோருக்குக்
அறமே கூற்றாகும் 
வரலாற்றையே கேலி செய்யும்
இட்லர்களின் தண்டோரா வளர்பிறை
வாசம் தாங்க முடியவில்லை…….!

இருண்ட உலகில்
சந்ததிகளின் வாழ்வு
நமக்கு சுதந்திரம் எப்போது?
மொழி,இனம் மறக்கும் நமக்கு
சுதந்திரம் எப்போது?
பிரிந்து வாழும் நம்மினம்
சுதந்திரம் எப்போது?





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை