முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆளாய்ச் சென்று ஆவியாய் வந்தீரோ

கவிதைஆளாய்ச் சென்று ஆவியாய் வந்தீரோ 21.8.14
                வே.ம.அருச்சுணன் - மலேசியா

ஆளாய்ச் சென்று மக்கள்
ஆவியாய் பிறந்த மண்
திரும்புவது என்ன கொடுமை?
உலகில்  
இப்படியும் நடப்பது மனம் ஏற்குமா?

பச்சைப் பாலகன் முதலாய்
இளையோர் முதியோர்  
வாழ்வில் வசந்தம்
இனிய கீதம் இசைக்க
வானில் பயணிக்கும் வேளை
பாவிகளின் அடாவடியால்
நொடியில் தூளாகிப்போனது
இறைவா உன்னதாட்சியில் நீதி
கள்ளத் தோணியில்ஏறிக்கொண்டதே!


இறந்த பின்னும்
பிறந்த மண் தேடியவரும்
எங்கள் அன்புச்செல்வங்களே
நாட்டு மக்கள்
இனம்,மதம்,மொழி
கடந்து வரவேற்க
நீங்கள் சென்ற நுழைவாயில்
ஆராத்துயரடன் அகன்ற விழிகளோடு
மடைதிறந்த வெள்ளம் கண்களில்
கொப்பளிக்க வரவேற்கிறோம்………..!

நீங்கள்
நாட்டின் தேசிய வீரர்கள்
இன்னுயிரைத் தந்து நாட்டுப்புகழை
உயரத்தில் உயர்த்திப் பிடித்தவர்கள்……!

நாடே
உங்களுக்காக ஒரு நிமிடம்
மௌனம் கொள்கிறது
புனிதமான உங்கள் ஆத்மா
சொர்கத்தில் நிச்சயம்………..!

அறியாமல்
தவறுகள் செய்திருந்தால்
பெருமனதுடன் எங்களை மன்னிப்பீர்

நாடு
மீண்டும் அமைதி பெற
மக்கள் பிரிவின்றி வாழ
ஒன்றுமையாய் வணங்குகிறோம்
ஆசிர்வதிப்பாயாக………….!
   

                      ---------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை