பறவைகள்
வே.ம.அருச்சுணன்
பறவைகள்
வானத்தில் பறவைகள்
வண்ணங்களில் பறக்கின்றன
துன்பமறியா உயிரினங்கள்
தூரமாய்ச் சுற்றுகின்றன
துயரமின்றி வாழ்கின்றன
காலம் வருகையில்
கவலையின்றி மறைகின்றன....!
மனிதன்
தாயின் வயிற்றில்
தவல்கிறான் பத்து மாதம்
பிரசவம் தாய்க்கு மறுபிறப்பு
பிறந்ததுமே அழுகுரல்
அமுதூட்டும் முதல் சங்கீதம்
அம்மா கேட்டு மகிழ்கிறாள்....!
பிள்ளை வளர்கிறான்
பிரச்னைகள் தொடர்கின்றன
வாழ்க்கையின் ஒவ்வோர்
வளர்ச்சியிலும் சவால்கள்
நடக்க எத்தனிக்கும் போது
நளினமாய்ச் சருக்கலும் தொடர்கிறது...!
கற்றவர் உலகை ஆள்வார்
கல்லாதார் ஒடுங்கிப்போவார்
கடுந்தவம் கல்வி கைவசமாகிறது
பெற்றோரின் வாழ்வு
பெருமையுடன் மறுபதிப்பாய்
நாளும் நடைபயில்கிறது
நக்கலும் கிண்டலுமாய்ச் சிலகாலம்....!
பறவையாய் வானில்
பறக்க நினைக்கிறான்
அக்கினிக் குண்டங்களால்
ஆடியே போகிறான்
ஆறறிவு ஆஸ்தமனத்தால்
அகிலம் பொல்லாத்தாகிறது
பாதாளம் நோக்கிப்
பாய்ந்து செல்கிறான்....!
*****************
கருத்துகள்
கருத்துரையிடுக