முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூங்காற்றாய் வந்திடுமே


                             பூங்காற்றாய் வந்திடுமே              
(அறுசீர் விருத்தம்)          வே.ம.அருச்சுணன் 


பல்லினம்          கொண்டிந்த      நாட்டில
      நற்சுவை    உணவுக்கு         பஞ்சமில
எல்லையிலா     மகிழ்ச்சியும்       மறையில
     ஏற்றமும்      நாளுமே           குறையல
எல்லோரும்       விரும்பிடும்       வகையில
      எளிதாய்     மலிவான         விலையில
நில்லாமல்         உண்பதும்        துறக்கல
       நீடிக்கும்     போக்கும்         விலங்கல.....!     

நல்லுணவு        நாசிலெமா       கண்டாலே
      நாக்கில்     எச்சில்             ஊறிடுமே
கல்லாரும்        கற்றோரும்       அதனை
       காலம்      கரையுமுன்        உண்பார்
எல்லார்           மகிழ்வும்           மிஞ்சிடுவார்
       ஏற்றமிகு   விலையிலும்      உருசிப்பார்
நில்லாது         அறுசுவை         வேண்டுவார்  
      நீடிக்கும்     சுவைக்கே        ஏங்கிடுவார்....!

செந்தீயாய்        நெத்திலிச்       சம்பலும்
      சேர்ந்தே     கணவாய்க்       குழம்பும்
செந்நிறத்து      பொரித்தக்        கோழியும்
வெந்திட்ட                கோழிமுட்டை     அவியலும்
   வேண்டியளவு        தேங்காய்ச்          சோற்றுடன்
குந்தகமின்றி            தே தாரே          உறிஞ்சலுடன்
         கூச்சலின்றி      வயிற்றுக்குள்      தள்ளுகிறார்.....!

இரும்பாய்ப்              பன்னெடுங்          காலமும்
         ஈர்ப்பாய்         உண்ணும்            வேளையிலே
பெருமளவில்           உடலிலே             உபாதைகள்
         போராய்த்      தொடங்கும்           கணத்திலே
கருத்திழந்து         கண்டபடி                உண்பதாலே
          காசைக்      கொடுத்தே            துயர்பெற்றே
வருந்துதல்           ஏற்புடையச்             செயலாமோ
      வாழ்வதற்கு    மட்டுமுண்               நலம்காண்பார்.....!  

கொடியநோய்        தரும்வயிறே           மூலமே
        கேடுவரும்     உணவுகள்             தள்ளுவோமே  
நெடியவாழ்வு         பூங்காற்றாய்           வந்திடுமே
         நோயற்ற      வாழ்வுமே              கூடிடுமே
மடியாத                 உடல்நலம்            வந்திடுமே         
       மாண்டிடும்      காலம்நிதம்           நீண்டிடுமே
குடியுயர்ந்திட          கோடிநன்மை        செய்வோமே   
         கூடிமகிழ      காலனும்              வாழ்த்திடுமே.....!
          


குப்பைகள்               போடுமிடமாய்       வயிற்றினை       
     கூடியமட்டும்        செய்யாமல்           மனிதனாய்த்       
தப்புகள்                  இனியும்                கொள்ளாமல்
        தாயுள்ளம்       கொண்டவுயர்        மனத்தாலே
ஒப்பிலா                  செயலாலே           பேரின்பம்
        ஓயாமல்         முயற்சிகள்             செய்வீரே
தொப்பை                வயிற்றைத்            துறப்பில்புதுத்
       தோற்றம்         பெற்றேநீ               மகிழ்வீரே......!

















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாமன் மச்சான் விளையாட்டு

            மாமன் மச்சான் விளையாட்டு                                       வே.ம.அருச்சுணன்  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘ சிவாஜி போஸ் ’    இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல் , வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான் இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த் தமிழன் முதுகில்   பவனிவரலாம் அல்லவா ? தேர்தல் கொள்ளையுரையைப் பவிசுடன் அறிவிக்கிறார் ...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:             பணமூட்டை புகை மூட்டமானது                                  வே.ம.அருச்சுணன் – மலேசியா   சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா ? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா ? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா ? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா ? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா ?   உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு!   ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!   மக்கள்  அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் ...