பூங்காற்றாய் வந்திடுமே
(அறுசீர் விருத்தம்)
வே.ம.அருச்சுணன்
பல்லினம் கொண்டிந்த
நாட்டில
நற்சுவை உணவுக்கு
பஞ்சமில
எல்லையிலா மகிழ்ச்சியும் மறையில
ஏற்றமும் நாளுமே குறையல
எல்லோரும் விரும்பிடும் வகையில
எளிதாய் மலிவான விலையில
நில்லாமல் உண்பதும் துறக்கல
நீடிக்கும் போக்கும் விலங்கல.....!
நல்லுணவு நாசிலெமா கண்டாலே
நாக்கில் எச்சில் ஊறிடுமே
கல்லாரும் கற்றோரும் அதனை
காலம் கரையுமுன் உண்பார்
எல்லார் மகிழ்வும் மிஞ்சிடுவார்
ஏற்றமிகு விலையிலும் உருசிப்பார்
நில்லாது அறுசுவை வேண்டுவார்
நீடிக்கும் சுவைக்கே
ஏங்கிடுவார்....!
செந்தீயாய் நெத்திலிச்
சம்பலும்
சேர்ந்தே கணவாய்க் குழம்பும்
செந்நிறத்து பொரித்தக் கோழியும்
வெந்திட்ட கோழிமுட்டை
அவியலும்
வேண்டியளவு
தேங்காய்ச் சோற்றுடன்
குந்தகமின்றி ‘தே’ தாரே உறிஞ்சலுடன்
கூச்சலின்றி வயிற்றுக்குள் தள்ளுகிறார்.....!
இரும்பாய்ப் பன்னெடுங் காலமும்
ஈர்ப்பாய் உண்ணும் வேளையிலே
பெருமளவில் உடலிலே உபாதைகள்
போராய்த் தொடங்கும் கணத்திலே
கருத்திழந்து கண்டபடி உண்பதாலே
காசைக் கொடுத்தே துயர்பெற்றே
வருந்துதல் ஏற்புடையச் செயலாமோ
வாழ்வதற்கு மட்டுமுண் நலம்காண்பார்.....!
கொடியநோய் தரும்வயிறே மூலமே
கேடுவரும் உணவுகள்
தள்ளுவோமே
நெடியவாழ்வு பூங்காற்றாய் வந்திடுமே
நோயற்ற வாழ்வுமே கூடிடுமே
மடியாத உடல்நலம்
வந்திடுமே
மாண்டிடும் காலம்நிதம் நீண்டிடுமே
குடியுயர்ந்திட கோடிநன்மை செய்வோமே
கூடிமகிழ காலனும் வாழ்த்திடுமே.....!
குப்பைகள் போடுமிடமாய் வயிற்றினை
கூடியமட்டும் செய்யாமல் மனிதனாய்த்
தப்புகள் இனியும் கொள்ளாமல்
தாயுள்ளம் கொண்டவுயர்
மனத்தாலே
ஒப்பிலா செயலாலே பேரின்பம்
ஓயாமல் முயற்சிகள் செய்வீரே
தொப்பை வயிற்றைத் துறப்பில்புதுத்
தோற்றம் பெற்றேநீ மகிழ்வீரே......!
கருத்துகள்
கருத்துரையிடுக