முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூங்காற்றாய் வந்திடுமே


                             பூங்காற்றாய் வந்திடுமே              
(அறுசீர் விருத்தம்)          வே.ம.அருச்சுணன் 


பல்லினம்          கொண்டிந்த      நாட்டில
      நற்சுவை    உணவுக்கு         பஞ்சமில
எல்லையிலா     மகிழ்ச்சியும்       மறையில
     ஏற்றமும்      நாளுமே           குறையல
எல்லோரும்       விரும்பிடும்       வகையில
      எளிதாய்     மலிவான         விலையில
நில்லாமல்         உண்பதும்        துறக்கல
       நீடிக்கும்     போக்கும்         விலங்கல.....!     

நல்லுணவு        நாசிலெமா       கண்டாலே
      நாக்கில்     எச்சில்             ஊறிடுமே
கல்லாரும்        கற்றோரும்       அதனை
       காலம்      கரையுமுன்        உண்பார்
எல்லார்           மகிழ்வும்           மிஞ்சிடுவார்
       ஏற்றமிகு   விலையிலும்      உருசிப்பார்
நில்லாது         அறுசுவை         வேண்டுவார்  
      நீடிக்கும்     சுவைக்கே        ஏங்கிடுவார்....!

செந்தீயாய்        நெத்திலிச்       சம்பலும்
      சேர்ந்தே     கணவாய்க்       குழம்பும்
செந்நிறத்து      பொரித்தக்        கோழியும்
வெந்திட்ட                கோழிமுட்டை     அவியலும்
   வேண்டியளவு        தேங்காய்ச்          சோற்றுடன்
குந்தகமின்றி            தே தாரே          உறிஞ்சலுடன்
         கூச்சலின்றி      வயிற்றுக்குள்      தள்ளுகிறார்.....!

இரும்பாய்ப்              பன்னெடுங்          காலமும்
         ஈர்ப்பாய்         உண்ணும்            வேளையிலே
பெருமளவில்           உடலிலே             உபாதைகள்
         போராய்த்      தொடங்கும்           கணத்திலே
கருத்திழந்து         கண்டபடி                உண்பதாலே
          காசைக்      கொடுத்தே            துயர்பெற்றே
வருந்துதல்           ஏற்புடையச்             செயலாமோ
      வாழ்வதற்கு    மட்டுமுண்               நலம்காண்பார்.....!  

கொடியநோய்        தரும்வயிறே           மூலமே
        கேடுவரும்     உணவுகள்             தள்ளுவோமே  
நெடியவாழ்வு         பூங்காற்றாய்           வந்திடுமே
         நோயற்ற      வாழ்வுமே              கூடிடுமே
மடியாத                 உடல்நலம்            வந்திடுமே         
       மாண்டிடும்      காலம்நிதம்           நீண்டிடுமே
குடியுயர்ந்திட          கோடிநன்மை        செய்வோமே   
         கூடிமகிழ      காலனும்              வாழ்த்திடுமே.....!
          


குப்பைகள்               போடுமிடமாய்       வயிற்றினை       
     கூடியமட்டும்        செய்யாமல்           மனிதனாய்த்       
தப்புகள்                  இனியும்                கொள்ளாமல்
        தாயுள்ளம்       கொண்டவுயர்        மனத்தாலே
ஒப்பிலா                  செயலாலே           பேரின்பம்
        ஓயாமல்         முயற்சிகள்             செய்வீரே
தொப்பை                வயிற்றைத்            துறப்பில்புதுத்
       தோற்றம்         பெற்றேநீ               மகிழ்வீரே......!

















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை