முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு மாலை நேரம்




கவிதை:                       ஒரு மாலை நேரம்               
                                                 வே.ம.அருச்சுணன் 

சம்பளம்  கிடைத்திட்ட  மாலைவேளை
        சாந்திக்காக  நண்பர்கள் கூடுகின்றார்   
தெம்புடனே  கடைதனில்  அமருகின்றார்
         தேனாய்க்  கொஞ்சிடும் பேரழகிகள்
வம்பில்லா  தேன்சுவை பேச்சாலே
          வாஞ்சையுடன்  வருகின்றார்  புட்டியோடு
தம்கட்டியே   குடிக்கின்றார் வயிறுபருத்திட                                        
           தாளங்கள்  தாறுமாறாய்ப்   போடுகின்றார்.....! 
         
பொதுமிடமென் றும்பாராமல்  பேயாட்டம்
        போடுகிறார் இனமானம் விற்கின்றார்
மதுவினால்  தம்முயிருக்கும்  விலைகூறுகிறார்                                              
         மாமனிதரையும்  வம்புக்கே  இழுக்கின்றார்
எதுசொலியும்  அனைவரையும்  அநீதிசெய்கிறார்
         ஏனென்று  கேட்போரை வசைபாடுகிறார்
இதுவெலாம்  போதையில்  செயல்படுத்தும்
          ஈனப்பிறவிகள்  பூமிக்கிழைக்கும்  துரோகமன்றோ.....




குடித்தழியும்  பாவச்செயலை   விட்டொழிக்கும்
          கூடிவாழும்  குடும்பத்தலைவனை வணங்குவோம்
 நெடியவாழ்வில்   கோவில்கலசமாய்  விளங்கிடும்
              நேர்மையுள்ள   மனிதர்களை    வாழ்த்துவோம்
 இடியாய்த்   துன்பங்கள்   சூழ்ந்தாலும்
            ஈடற்றவாழ்வை   குறைவின்றி  நடத்திடுவோர்
 முடிமன்னர்  பேற்றினைப்   பெற்றவரே  
             மூடர்களின்  செயல்தனைத்  வேரறுப்பவரே.....!

நல்லநட்பால்    உயர்ந்தோர்   நிலைக்கின்றார்    
             நாளுமே  குணக்குன்றாய்  வாழ்கின்றார்
பொல்லாதவர்   சகவாசத்தில்  அழிகின்றார்
             போக்கிரிகள்  உறவென்றால்   கெடுகின்றார்  
சொல்வேந்தர்   சொற்கேட்டால்   உயர்கின்றார்  
             சோதனைகள்  கடந்துமே  வெல்கின்றார்
சொல்வாக்கிலார்  ஆராதனையை      வெறுக்கின்றார் 
             சோதனையின்றி  வாழ்கையினை   நகர்த்துகின்றார்.....!   
            



             
              
        
              


                       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை