முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனசெல்லாம் இனிக்குதே



கவிதை:           மனசெல்லாம் இனிக்குதே           
                   வே.ம.அருச்சுணன்                           


பொன்விளையும்   பூமியிலலே   காலூன்ற  வேண்டுமையா
         போகற்று   நிற்கையிலே  யாருவுன்ன   மதிப்பதில்ல
 மணிக்கணக்கில்  பேசிநீயும்  சாதிக்கவே  ஒன்னுமில்ல
          மானத்தோட  வாழவேயோசி   ஒன்றுபடவே வழியிருக்கு
சந்ததி நல்லா    வாழனுமுனா   சாதிகீதி   பேசித்திரியாதே
          சாபத்தால   காணாமலே   போயிடுவே  கவனமாயிரு
உருப்படும்வழி     கண்முன்னே   இருக்குதேநீ   வாழ்றதபாரு......!

அண்ணன்தம்பியா   மனம்திறந்து   அனைவரிடமும்   பழகிப்பாரு
         அப்பவரும்   பாசமும்நேசமும்  அன்பும்பண்பும்  ஒட்டும் உறவும்
ஒன்றுபட்டால்   உண்டுவாழ்வுனு   தோட்டத்துலே  கத்துகிட்டோமே
           ஓட்டலயத்துல  வாழ்ந்தயெல்லாம்  
மறந்தெமொக்கை  ஆயிட்டியா


பழசமறந்தா     மனுசனாவாழ    முடியாதுன்னு   தெரியலையா?
           பாவத்தநீ  இன்னுமா சுமக்கனுமுனு  நினைக்கிறியே
முறையாகுமா?   வாழ்க்கைய  மாற்றிக்காட்டு   சரியாயிடுவே
          மூவினமும்   முன்னாடியே போயிடுவஏன்னா     நீஅறிவாளி....!
சோழமன்னர்    கொடிபறந்த  மண்ணிலேநீயும்     வீரமுடன்வாழனும்
         சோற்றுக்காகக்  கையேந்தும்  அன்னக்காவடி  வேடத்தாலே
மடியும்நாளை   எண்ணாதேநீ  கோபுரகலசமாய்   நிமிர்ந்து நிற்கும்
          மானமிகும்  பொன்னாளைக்  களிப்புடனே    வரவேற்கவே
விவேகமுடன்  கூடிடுவீர் வாழும்வழி   தேடுடிவீர்
          வீரமுரசுடன்   நல்வாழ்த்து  கூறிடுவீர்  அனைவருமிங்கே
மகிழ்வுடனே  வாழ்வுதனை  வாழ்ந்திடும்  நற்காலமும்
          மாண்புடனே  பிறந்ததென்றே  எழிச்சியுடனே  கொட்டுமுரசே.....! 


    
                   

     
                         

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை