கவிதை:
மனசெல்லாம் இனிக்குதே
வே.ம.அருச்சுணன்
பொன்விளையும் பூமியிலலே
காலூன்ற வேண்டுமையா
போகற்று நிற்கையிலே
யாருவுன்ன மதிப்பதில்ல
மணிக்கணக்கில்
பேசிநீயும் சாதிக்கவே ஒன்னுமில்ல
மானத்தோட வாழவேயோசி
ஒன்றுபடவே வழியிருக்கு
சந்ததி
நல்லா வாழனுமுனா சாதிகீதி
பேசித்திரியாதே
சாபத்தால காணாமலே
போயிடுவே கவனமாயிரு
உருப்படும்வழி கண்முன்னே
இருக்குதேநீ வாழ்றதபாரு......!
அண்ணன்தம்பியா மனம்திறந்து
அனைவரிடமும் பழகிப்பாரு
அப்பவரும் பாசமும்நேசமும் அன்பும்பண்பும் ஒட்டும் உறவும்
ஒன்றுபட்டால் உண்டுவாழ்வுனு தோட்டத்துலே
கத்துகிட்டோமே
ஓட்டலயத்துல வாழ்ந்தயெல்லாம்
மறந்தெமொக்கை ஆயிட்டியா
பழசமறந்தா மனுசனாவாழ முடியாதுன்னு தெரியலையா?
பாவத்தநீ இன்னுமா சுமக்கனுமுனு நினைக்கிறியே
முறையாகுமா? வாழ்க்கைய
மாற்றிக்காட்டு சரியாயிடுவே
மூவினமும் முன்னாடியே போயிடுவஏன்னா நீஅறிவாளி....!
சோழமன்னர் கொடிபறந்த
மண்ணிலேநீயும் வீரமுடன்வாழனும்
சோற்றுக்காகக் கையேந்தும்
அன்னக்காவடி வேடத்தாலே
மடியும்நாளை எண்ணாதேநீ
கோபுரகலசமாய் நிமிர்ந்து நிற்கும்
மானமிகும் பொன்னாளைக்
களிப்புடனே வரவேற்கவே
விவேகமுடன் கூடிடுவீர் வாழும்வழி தேடுடிவீர்
வீரமுரசுடன் நல்வாழ்த்து
கூறிடுவீர் அனைவருமிங்கே
மகிழ்வுடனே வாழ்வுதனை
வாழ்ந்திடும் நற்காலமும்
மாண்புடனே பிறந்ததென்றே
எழிச்சியுடனே கொட்டுமுரசே.....!
கருத்துகள்
கருத்துரையிடுக