முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனசெல்லாம் இனிக்குதே



கவிதை:           மனசெல்லாம் இனிக்குதே           
                   வே.ம.அருச்சுணன்                           


பொன்விளையும்   பூமியிலலே   காலூன்ற  வேண்டுமையா
         போகற்று   நிற்கையிலே  யாருவுன்ன   மதிப்பதில்ல
 மணிக்கணக்கில்  பேசிநீயும்  சாதிக்கவே  ஒன்னுமில்ல
          மானத்தோட  வாழவேயோசி   ஒன்றுபடவே வழியிருக்கு
சந்ததி நல்லா    வாழனுமுனா   சாதிகீதி   பேசித்திரியாதே
          சாபத்தால   காணாமலே   போயிடுவே  கவனமாயிரு
உருப்படும்வழி     கண்முன்னே   இருக்குதேநீ   வாழ்றதபாரு......!

அண்ணன்தம்பியா   மனம்திறந்து   அனைவரிடமும்   பழகிப்பாரு
         அப்பவரும்   பாசமும்நேசமும்  அன்பும்பண்பும்  ஒட்டும் உறவும்
ஒன்றுபட்டால்   உண்டுவாழ்வுனு   தோட்டத்துலே  கத்துகிட்டோமே
           ஓட்டலயத்துல  வாழ்ந்தயெல்லாம்  
மறந்தெமொக்கை  ஆயிட்டியா


பழசமறந்தா     மனுசனாவாழ    முடியாதுன்னு   தெரியலையா?
           பாவத்தநீ  இன்னுமா சுமக்கனுமுனு  நினைக்கிறியே
முறையாகுமா?   வாழ்க்கைய  மாற்றிக்காட்டு   சரியாயிடுவே
          மூவினமும்   முன்னாடியே போயிடுவஏன்னா     நீஅறிவாளி....!
சோழமன்னர்    கொடிபறந்த  மண்ணிலேநீயும்     வீரமுடன்வாழனும்
         சோற்றுக்காகக்  கையேந்தும்  அன்னக்காவடி  வேடத்தாலே
மடியும்நாளை   எண்ணாதேநீ  கோபுரகலசமாய்   நிமிர்ந்து நிற்கும்
          மானமிகும்  பொன்னாளைக்  களிப்புடனே    வரவேற்கவே
விவேகமுடன்  கூடிடுவீர் வாழும்வழி   தேடுடிவீர்
          வீரமுரசுடன்   நல்வாழ்த்து  கூறிடுவீர்  அனைவருமிங்கே
மகிழ்வுடனே  வாழ்வுதனை  வாழ்ந்திடும்  நற்காலமும்
          மாண்புடனே  பிறந்ததென்றே  எழிச்சியுடனே  கொட்டுமுரசே.....! 


    
                   

     
                         

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாமன் மச்சான் விளையாட்டு

            மாமன் மச்சான் விளையாட்டு                                       வே.ம.அருச்சுணன்  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘ சிவாஜி போஸ் ’    இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல் , வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான் இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த் தமிழன் முதுகில்   பவனிவரலாம் அல்லவா ? தேர்தல் கொள்ளையுரையைப் பவிசுடன் அறிவிக்கிறார் ...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:             பணமூட்டை புகை மூட்டமானது                                  வே.ம.அருச்சுணன் – மலேசியா   சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா ? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா ? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா ? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா ? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா ?   உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு!   ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!   மக்கள்  அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் ...