ஜெயமுடன்
வாழ்ந்திடு ஐயாவு
வே.ம.அருச்சுணன்
அகிலமும் யோசித்தே – நீ
ஆனந்தம்
அடைந்திடு
மகிவுடனே வாழலாம்
_ நீ
மாண்பையும்
பெற்றிடு....!
அன்புடன்
பழகியே _
நீ
ஆலமரமாய் நிமிர்ந்திடு
உன்னிடம்
நீதியிருப்பின் _ நீ
ஊக்கமுடன் திகழ்ந்திடு....!
எல்லாரும் நல்லவராய் _ நீ
ஏற்றாலே பூரித்திடு
நல்லாரின் அணைப்பாலே
_நீ
நாளுமே சாதித்திடு....!
கெடுவான் கெடுமதியால் _ நீ
கேட்டதைக் கொடுத்திடு
நெடுங்காலம் கூடிமகிழலாம்
_ நீ
நேர்மையால் உயர்ந்திடு.....!
விட்டுக்கொடு பகைமறையும்
_ நீ
வீம்பைமற வாழ்வுமலர்ந்திடு
தட்டிக்கொடு உறவாலே _ நீ
தாயன்பில் எழுந்திடு.....!
கனிவானே நேசத்தால் _
நீ
காவல்தெய் வமாகிவிடு
தனியனாய் மேம்பட்டு _
நீ
தாளர்வின்றி வளர்ந்திடு....!
உறவிலே விரிசலின்றி _
நீ
ஊருடனே சேர்ந்திடு
மறவாதாச் சொந்தத்தால் _
நீ
மாமனிதராய் ஒளிவீசிடு.....!
வெற்றுமனித னாய்த்திரியாமல் _ நீ
வேற்றுமை
களைந்திடு
வெற்றியானாய் நலம்போற்றி
_நீ
வேங்கையாய் முழங்கிடு.....!
மெய்யாய் உழைத்திடு
_ நீ
மேலோரை
வணங்கிடு
ஜெய்க்கனும் உறுதியாய் ஐயாவு _ நீ
ஜெயமுடன் வாழ்ந்திடு ஐயாவு....!
கருத்துகள்
கருத்துரையிடுக